நாளை முதல் மழை பெய்யும்... மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்... வானிலை மையம் எச்சரிக்கை- வீடியோ
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழகத்தில் அக்டோபர் மாதம் தொடங்கிய வடகிழக்கு பருவத்தில் இதுவரை 10 சதவீதம் அளவுக்குத்தான் மழை பெய்துள்ளது. இந்நிலையில், நாளை மாலை முதல் மழை பெய்யத் தொடங்கும் என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலகிருஷ்ணன் தகவல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "தென்கிழக்கு வங்கக் கடலில் இலங்கை அருகே புதிய காற்றழுத்தம் உருவாகியுள்ளதை அடுத்து தமிழகத்தில் டிசம்பர் 1ம் தேதி முதல் 4ம் தேதி வரை மழை பெய்யும். இதனால் நாளை முதல் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம்" என அறிவுறுத்தியுள்ளார்.












Click it and Unblock the Notifications