அமில சுத்திகரிப்பு ஆலையால் அவதி... உதகையில் மக்கள் போராட்டம்- வீடியோ
Subscribe to Oneindia Tamil
உதகை: நீலகிரி மாவட்டம் உதகை அருகே உள்ள எல்லகிரியில் ஊசி தயாரிப்பு நிறுவனம் ஒன்று இயங்கி வருகிறது. ஏற்கனவே இந்த தொழிற்சாலையால் மக்கள் அவதிப்பட்டு வந்துள்ளனர். இந்நிலையில் புதிதாக அமில சுத்திகரிப்பு ஆலை ஒன்றும் இப்பகுதியில் தொடங்கப்பட்டுள்ளது. இங்கிருந்து அதிக இரைச்சல் சத்தம் கேட்பதாகவும், தோல் நோய்களால் மக்கள் பாதிக்கப்படுவதாகவும் மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்து வந்தனர். ஆனால், இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் மாசுக்கட்டுப்பாடு வாரியம் மற்றும் மாவட்ட நிர்வாகத்தைக் கண்டித்து அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.












Click it and Unblock the Notifications