‘மண்ணில் மறைந்தாலும் எங்கள் மனதில் வாழ்வார்’.. ஜெ. நினைவிடத்தில் மக்கள் கண்ணீர் அஞ்சலி- வீடியோ
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை அப்பல்லோவில் சிகிச்சைப் பெற்று வந்த முதல்வர் ஜெயலலிதா, கடந்த 5ம் தேதி இரவு காலமானார். அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்குப் பின் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர். சமாதி அருகே நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில், தொடர்ந்து அவரது நினைவிடத்தில் மக்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தி வருகின்றனர். சிலர் மொட்டையிட்டும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். 'மண்ணில் மறைந்தாலும், மக்கள் மனதில் ஜெயலலிதா வாழ்வார். புரட்சித் தலைவியின் பெயர் என்றும் நிலை பெற்றிருக்கும்' என அப்போது அவர்கள் உருக்கத்துடன் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications