‘வெள்ளைத்தாது’ கொள்ளை... தட்டிக் கேட்ட அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தியவர் கைது- வீடியோ
Subscribe to Oneindia Tamil
சேலம்: சேலம் மாவட்டம் ஏற்காடு அடிவாரம் கொண்டநாயக்கன்பட்டியில் குவாரி ஒன்றில் மர்மநபர்கள் சட்டவிரோதமாக வெள்ளைத்தாது எனப்படும் மேக்னசைட் தாதுவை வெட்டி எடுப்பதாக வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து கொண்டநாயக்கன்பட்டி விஏஓ உட்பட அரசு அதிகாரிகள் பலர் அங்கு விரைந்தனர். அப்போது அவர்கள் மீது சரவணன் என்ற நபர் பொக்லைன் இயந்திரத்தை ஏற்றி கொல்ல முயற்சித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசில் வருவாய்த்துறை அதிகாரிகள் புகார் அளித்தனர். அதனைத் தொடர்ந்து தலைமறைவாக இருந்த சரவணனைப் போலீசார் கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications