வாகனச் சோதனையில் விவசாயியைத் தாக்கி கையை உடைத்த போலீசார்... கண்டனம் தெரிவித்து போராட்டம்- வீடியோ
Subscribe to Oneindia Tamil
ஈரோடு: ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் இருந்து கோபி செல்லும் சாலையில் காவல்துறை உதவி ஆய்வாளர் பழனிச்சாமி தலைமையில் வாகனச் சோதனை நடைபெற்றது. அப்போது, காரில் வந்த நடராஜ் என்ற விவசாயியை போலீசார் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் நடராஜின் கை எலும்பு முறிந்து அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவத்தால் ஆத்திரமடைந்த அப்பகுதி விவசாயிகள் பழனிச்சாமிக்கு எதிராக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.












Click it and Unblock the Notifications