பொய் வழக்கு டார்ச்சர்... மதுரை கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற தந்தை- மகன்- வீடியோ
Subscribe to Oneindia Tamil
மதுரை: போலீசார் பொய் வழக்குப்பதிவு செய்து துன்புறுத்துவதாகக் கூறி மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்டோ ஓட்டுநர் தனது மகனுடன் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தீக்குளிக்க முயன்ற நபரின் பெயர் கோச்சடை, அவரது மகன் பெயர் முத்துச்செல்வம் ஆகும். இருசக்கர வாகனத் திருட்டு வழக்கில் முத்துச்செல்வன் தற்போது முன் ஜாமீன் பெற்று, நீதிமன்ற உத்தரவின்படி கரிமேடு காவல் நிலையத்தில் கையெழுத்திட்டு வருகிறார். இந்நிலையில் விசாரணை என்ற பெயரில் பொய் வழக்குப் பதிவு செய்து தன்னை துன்புறுத்துவதாக மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முத்துச்செல்வம் தனது தந்தையும் தீக்குளிக்க முயன்றார். இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அங்கு பாதுகாப்புக்கு இருந்த போலீசார், அவர்கள் மீது தண்ணீரை ஊற்றி காப்பாற்றினர்.
வீடியோ:












Click it and Unblock the Notifications