ஜெ. விரைவில் உடல் நலம் பெறுவார்... சிங்கப்பூர் துணைப்பிரதமரின் ஆலோசகர் ஜோஸ்வா நம்பிக்கை- வீடியோ
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வரும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து முக்கிய தலைவர்கள் நேரில் சென்று நலம் விசாரித்து வருகின்றனர். அந்தவகையில், சிங்கப்பூர் துணைப்பிரதமர் தர்மன் சண்முகரத்தினம் ஆலோசகர் ஜோஸ்வா நேற்று அப்பல்லோ வந்து, முதல்வரின் உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஜோஸ்வா, "முதல்வர் ஜெயலலிதா விரைவில் உடல் நலம் பெறுவார்" என்று நம்பிக்கைத் தெரிவித்தார். மேலும், இது அரசு முறை நலம் விசாரிப்பல்ல என்றும், தனது தனிப்பட்ட அக்கறையினால் மருத்துவமனைக்கு வந்து நலம் விசாரித்ததாகவும் கூறினார்.












Click it and Unblock the Notifications