For Daily Alerts
Just In
ஒருதலைக் காதல்.. 10ம் வகுப்பு மாணவிக்கு கத்திக்குத்து.. தேனி அருகே கல்லூரிமாணவர் வெறிச்செயல்
தேனி: தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே, புவனேஸ்வரி என்ற 10-ம் வகுப்பு மாணவியை அதே பகுதியைச் சேர்ந்த நவீன்குமார் (18) என்ற கல்லூரி மாணவர், புவனேஸ்வரியை ஒருதலையாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. ஆனால், நவீனின் காதலை புவனேஸ்வரி ஏற்க மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த நவீன், புவனேஸ்வரியை கத்தியால் குத்தினார். இதையடுத்து வலியால் துடித்த புவனேஸ்வரியை, அப்பகுதி மக்கள் மீட்டு தேனி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக, மாணவியின் தாயார் அளித்த புகாரின் பேரில் தலைமறைவாக உள்ள கல்லூரி மாணவரை போலீசார் தேடி வருகின்றனர்.
Comments
theni love college student school girl oneindia tamil videos தேனி பள்ளி மாணவி கல்லூரி மாணவர் கத்திக்குத்து ஒன் இந்தியா தமிழ் வீடியோஸ்
English summary
A college student attacked a schoolgirl after she refused to reciprocate his love near Andipatti in Theni district. The incident happened on Tuesday night when the girl was returning home from tuitions. Police are on the lookout for the assailant.
Story first published: Thursday, November 17, 2016, 19:17 [IST]