For Daily Alerts
Just In
திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல்... ஓட்டுக்குப் பணம் வாங்கியதாக 48 பேருக்கு சம்மன்- வீடியோ
மதுரை: திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் வரும் 19ம் தேதி நடைபெற இருக்கிறது. இதையொட்டி தேர்தல் ஏற்பாடுகள் அனைத்தும் அங்கு தீவிரமாக நடந்து வருகின்றன. இந்நிலையில் மதுரை மாவட்ட ஆட்சியாளர் வீரசேகர ராவ் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், "திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் ஓட்டுக்கு பணம் வாங்கியதாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் 48 பேருக்கு சம்மன் அளிக்கப்பட்டுள்ளது" என்றார். மேலும் ஓட்டுக்குப் பணம் கொடுப்பதைத் தடுக்க 30 பறக்கும் படைகளும், 18 நிலையான கண்காணிப்புக் குழுவினரும் தொடர் கண்காணிப்பில் இருப்பதாகவும், திடீர் ஆய்வுகள் நடத்தப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
Comments
tirupparankundram by election madurai collector cash distribution voters oneindia tamil videos திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் மதுரை கலெக்டர் ஓட்டுக்குப் பணம்
English summary
Collector and District Election Officer K. Veera Raghava Rao on Tuesday assured that stringent monitoring and surveillance were in place to prevent cash distribution to voters in Tirupparankundram constituency, which is facing a by-election on November 19.