For Daily Alerts
Just In
ஒரு மாதத்திற்கு பிறகு, பெங்களூருக்கு தமிழக அரசு பஸ்கள் இயக்கம்- வீடியோ
பெங்களூர்: காவிரி வழக்கில், உச்சநீதிமன்ற உத்தரவை எதிர்த்து, மாநில அரசின் ஆசியோடு செப்டம்பர் 9ம் தேதி கர்நாடகா முழுக்க பந்த் நடைபெற்றது. அன்று முதல் இன்று காலை வரை தமிழக அரசு பஸ்கள் எதுவுமே கர்நாடகாவிற்குள் செல்லவில்லை. பெங்களூர் செல்ல வேண்டிய பஸ்கள் ஒசூர் எல்லையிலேயே நிறுத்தப்பட்டதால் அரசு பஸ்களை பயன்படுத்தி பெங்களூருக்கு வர முடியாமல் ஏழை, நடுத்தர மக்கள் அவதிப்பட்டனர்.இந்நிலையில் இன்று காலை 5.30 மணி முதல் ஒசூர் வழியாக தமிழக பஸ்கள் பெங்களூரு உள்ளிட்ட கர்நாடக பகுதிகளுக்குள் இயக்கப்பட ஆரம்பித்துள்ளது. அந்த பஸ்களுக்கு உரிய போலீஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது. நேற்று முதல் தமிவக பதிவெண் கார், லாரிகள் கர்நாடகாவிற்குள் இயங்க ஆரம்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
வீடியோ
Comments
English summary
Tamilnadu government buses started it' service to Karnataka after one month of stooping.
Story first published: Thursday, October 6, 2016, 17:27 [IST]