ரயில் கொள்ளை சம்பவங்களை தடுக்க நவீன கோச் அறிமுகம்.. அதிகாரி பேட்டி- வீடியோ
Subscribe to Oneindia Tamil
சேலம்: சேலம் ரயில்வே கோட்டத்தில், தூய்மை வாரம் கடைப்பிடிக்கப்படுவதையொட்டி, ரயில்வே ஸ்டேஷன் முழுவதும் தூய்மைப்படுத்தப்படுகிறது. இந்நிலையில், நேற்று, கோட்ட பொது மேலாளர் ஹரிசங்கர் வர்மா கூறியதாவது: ரிசர்வ் வங்கி அதிகாரிகள் என்னை சந்தித்தனர். அப்போது, நான் பணங்களை எடுத்துச் செல்லும் வகையில் பிரத்யேக ரயில் பெட்டி அமைக்க, பணம் தேவை என்று கூறினேன். அதை வழங்கினால், அனைத்து வசதிகளுடன் கூடிய, மிக பாதுகாப்பான ரயில் பெட்டி வடிவமைக்கப்படும். அதை பயன்படுத்தும்போது, திருட வாய்ப்பில்லை. கோட்ட அளவிலான, தலைமை ரயில் நிலையங்களில், சேலம் ரயில் நிலையம் முதன்மையானதாக தேர்வு செய்யப்பட்டுள்ளது மகிழ்ச்சி. இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications