கழிவுநீர் கால்வாயில் கர்ப்பப்பையுடன் மிதந்து வந்த சிசுக்கள்... திருச்சி அருகே பரபரப்பு- வீடியோ
Subscribe to Oneindia Tamil
திருச்சி: திருச்சி மாவட்டம் மண்பாறை அருகே உள்ள துவரங்குறிச்சியில் கழிவு நீர் கால்வாய் ஒன்றில் உயிர் இழந்த நிலையில் மூன்று சிசுக்கள் மிதந்து வந்ததைக் கண்டு அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து அப்பகுதி மக்கள் போலீசாருக்கும், சுகாதார துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த சுகாதாரத் துறை ஊழியர்கள், சிசுக்களின் சடலத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக அப்பகுதியில் உள்ள மருத்துவமனைகளில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications