For Daily Alerts
Just In
உதய் திட்டத்தை பார்த்து உதயசூரியனுக்கு பயம் ஏன்?: தமிழிசை கேள்வி- வீடியோ
திருச்சி: அரவக்குறிச்சி தேர்தலையொட்டி அங்கு பாஜக வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார் அக்கட்சியின் மாநிலத்தலைவர் தமிழிசை சவுந்திரராஜன். இதற்கிடையே திருச்சியில் தனியார் மருத்துவமனை திறப்பு விழாவில் கலந்து கொண்ட தமிழிசை, செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், "மத்திய அரசின் உதய் திட்டத்தைப் பார்த்து உதயசூரியனுக்கு பயம் ஏன்? மத்திய அரசின் திட்டத்தை மாநில அரசு ஏற்றுக்கொள்வதை விமர்சிக்கிறார். அவருக்கு ஏன் இந்த பயம் எனத் தெரியவில்லை" என்றார். மேலும், மீத்தேன் திட்டத்தில் கையெழுத்திட்ட திமுகவே இன்று தங்களால் அத்திட்டம் தடுக்கப்பட்டதாகக் கூறுகிறது. இது குறித்து ஸ்டாலின் விளக்கம் அளிக்க வேண்டும்' எனவும் அவர் வலியுறுத்தினார்.
Comments
English summary
The Tamilnadu BJP president Tamilisai has questioned that why DMK is fearing on Udhay scheme.
Story first published: Friday, November 11, 2016, 18:02 [IST]