மன உளைச்சல்... சட்டசபை முன்பு தீக்குளிக்க முயற்சித்த பெண் இன்ஸ்பெக்டரால் பரபரப்பு- வீடியோ
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னையில் சட்டசபை முன்பாக திருவொற்றியூர் இன்ஸ்பெக்டர் காஞ்சனா தீக்குளிக்க முயற்சித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு தீப்பற்ற வைக்க முயற்சித்த காஞ்சனாவை சக போலீசார் தடுத்து நிறுத்தி காப்பாற்றினர். சென்னை திருவொற்றியூர் காவல் நிலையத்தில் பெண் ஆய்வாளராக இருந்தவர் காஞ்சனா. இவரை சமீபத்தில் புலனாய்வு பிரிவுக்கு மாற்றினர். இதனால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக காஞ்சனா இன்று தற்கொலைக்கு முயன்றதாகக் கூறப்படுகிறது.
வீடியோ:












Click it and Unblock the Notifications