பாஜகவை தூக்கிவிடுறாங்க! அதிமுக அரசியலில் காணாமல்போகும் - மார்க்சிஸ்டு மாநில செயலாளர் பாலகிருஷ்ணன்
விழுப்புரம்: பாஜகவின் கொள்கையை தூக்கிப்பிடிக்கும் அதிமுக தமிழக அரசியலில் களத்தில் இருந்து காணாமல் போகும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்து உள்ளார்.
விழுப்புரத்தில் மார்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மண்டல பேரவை கூட்டம் கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்றது.
இதில் கலந்துகொண்ட அக்கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் முன்னதாக செய்தியாளர்களை சந்தித்தார்.

அம்பானி, அதானி
அப்போது பேசிய அவர், "தமிழகத்தில் ஜவுளி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கு பருத்தி விலை உயர்வே காரணம். எனவே அரசே நேரடியாக பருத்தியை கொள்முதல் செய்து குறைந்த விலையில் கொடுக்க வேண்டும். அதானி, அம்பானி போன்ற தனியார் நிறுவனங்கள் பருத்தியை கொள்முதல் செய்து பதுக்கி வைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

சர்க்கரை ஆலைகளை திறக்க வேண்டும்
மேலும் கரும்பு விவசாயிகளை பாதிக்காத வகையில் மூடி வைத்துள்ள பென்னாகரம் அம்பிகா சர்க்கரை ஆலை, மதுரை மாவட்டத்தில் உள்ள அரசு சர்க்கரை ஆலையை உடனடியாக திறக்க வழிவகை செய்ய வேண்டும். தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக அதிமுக ஆட்சியில் இருந்தபோது எந்த ஒரு விசாரணையும் நடத்தப்படவில்லை.

திமுக அரசின் துரித நடவடிக்கை
ஆனால் திமுக ஆட்சியில் விக்னேஷ் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட மூன்று அதிகாரிகளையும் உடனடியாக கைது செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் குற்றச் சம்பவங்கள் தொடர்பாக உண்மை தன்மையை ஆராய்ந்து தமிழ்நாடு காவல் துறையின் உடனடி நடவடிக்கை எடுத்து வருகிறது.

அதிமுக காணாமல்போகும்
தமிழ்நாடு அரசைப் பொருத்தவரை எதுவாக இருந்தாலும் உடனடி நடவடிக்கை எடுப்பதால் குறை சொல்ல ஏதுமில்லை. தமிழகத்தில் பாஜக அரசுக்கு துணை போகும் கட்சியாகவே அதிமுக செயல்பட்டு வந்தது. மத்திய அரசிடம் பொதுமக்களின் கோரிக்கைகள் எதையுமே அளிக்காமல் பாஜகவை தூக்கிவிடும் கட்சியாகவே அதிமுக செயல்பட்டு வருவதால் விரைவில் அதிமுக தமிழக அரசியல் களத்தில் இருந்து காணாமல் போகும்.

மதுரை நீதிமன்றமே ஆக்கிரமிப்புதான்
மதுரை நீதிமன்றம் நீர்நிலை ஆக்கிரமிப்பு தான். விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகமும் நீர்நிலை ஆக்கிரமிப்பில் கட்டப்பட்டதுதான். இப்படி இருக்க நீர்நிலைகளில் இருந்து கட்டிடங்களை இடிக்க உத்தரவிடுவது வேதனையாக உள்ளது. நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டாம் என்று நாங்கள் கூறவில்லை. நீர்நிலை ஆக்கிரமிப்பு பகுதியில் உள்ள பயனாளிகளுக்கு மாற்று இடங்களை ஏற்பாடு செய்யக் கோருகிறோம்.












Click it and Unblock the Notifications