21 வருடத்திற்கு பின்... பா.ம.க.வில் மீண்டும் இணைந்தார் பேராசிரியர் தீரன்... இன்னும் பலர் வருகின்றனர்
விழுப்புரம்: 21 ஆண்டுகளுக்கு பிறகு, பாமக முன்னாள் தலைவர் தீரன் மீண்டும் அக்கட்சியில் இணைந்துள்ளார். விழுப்புரம் மாவட்டம் தைலாபுரம் இல்லத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் முன்னிலையில் கட்சியில் தன்னை இணைத்து கொண்டார்.
பாமகவில் தலைவராக இருந்தவர் பேராசிரியர் தீரன். சில ஆண்டுகளுக்கு முன்பு அதிமுகவில் இணைந்தார். அவர் அக்கட்சியின் செய்தித் தொடர்பாளராகவும் இருந்தார். டிடிவி தினகரனுக்கு ஆதரவாளராகச் செயல்பட்டதாகவும், தொலைக்காட்சி விவாதங்களில் தினகரன் பற்றி விமர்சிக்காமல் மென்மையான போக்கைக் கடைபிடித்து வந்ததாகவும், இதனால் அதிமுக தலைமை அதிருப்தியில் இருந்ததாகவும் சொல்லப்பட்டது.

இதனைத் தொடர்ந்து அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் பேராராசியர் தீரனை அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் விடுவித்தனர்.
சுமார் 6 மாத காலம் பேராசிரியர் தீரன் எந்தக் கட்சியிலும் இணையாமல் இருந்து வந்தார். இந்நிலையில் மீண்டும் பாமகவில் இணைந்துள்ளார். பாமகவிலிருந்து வெளியேறிய பேராசிரியர் தீரன் உள்ளிட்ட பலர் விரைவில் பாமகவிற்குத் திரும்புகின்றனர் என்று அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் கடந்த சில தினங்களுக்கு முன்பு தெரிவித்திருந்த நிலையில், பேராசிரியர் தீரன் மீண்டும் இணைந்துள்ளார்.
வன்னியர்சங்கம் தொடங்கிய காலம் முதல் பாமகவின் வளர்ச்சிக்காக உழைத்தவர் பேராசிரியர் தீரன் என்றும், 21 ஆண்டுகளுக்கு முன்பு எங்களை பிரித்த் காலம் மீண்டும் ஒன்று சேர்த்துவிட்டதாகவும் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
பேராசிரியர் தீரன் கூறுகையில், நான் பணியாற்ற வேண்டிய இடம் பாமக தான் என்பதை உணர்ந்து கட்சியில் இணைந்துள்ளேன். அன்புமணியை முதல்வராக்குவோம் என்ற லட்சியத்துடன் என் செயல்பாடுகள் இருக்கும் என்றார்.
-
ராமதாஸுக்கு முட்டுக்கட்டை.. அன்புமணிக்கு எதிரான உரிமையியல் வழக்கிற்கு இடைக்கால தடை விதித்த ஐகோர்ட்! -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
கள்ளக்குறிச்சியில் சினிமாவை மிஞ்சும் சம்பவம்.. காதல் கணவனுக்கு உயிருடன் கொள்ளி வைத்த அம்மு -
எங்களை எப்படியாவது காப்பாத்துங்க.. அமெரிக்கா - இந்தியாவிடம் கெஞ்சும் வங்கதேசம்.. ரஷ்யா உதவுமா? -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி












Click it and Unblock the Notifications