வயசானவங்களுக்கு மட்டுமே குறி.. காரணமே வேற.. பகீர் கிளப்பும் நவீன் குமார்
விழுப்புரம்: வயசானவர்களை மட்டுமே குறி வைப்பதுதான் நவீன்குமாரின் வேலை... தாத்தா, பாட்டிகள் சிக்கினால் அம்பேல்தான்!
திருவண்ணாமலை மாவட்டம் எறும்பூண்டி பகுதியை சேர்ந்தவர் நவீன்குமார். பணம் பறிப்பதில் கில்லாடி இவர். ஏடிஎம் மையங்களில் போய் நின்று கொள்வார். அங்கு வரும் வயதானவர்களை நோட்டமிடுவார்.

விஷயம் தெரியாதவர்கள் என்றால், அருகில் சென்று உதவுவது போல நடிப்பார். ஏடிஎம் கார்டை வாங்கி, ரகசிய நம்பரையும் கேட்டு பட்டனை அழுத்துவது போல பாசாங்கு செய்வார்.
பிறகு பணம் வரவில்லையே, இந்தாங்க உங்க கார்டு என்று திருப்பி தரும்போது, ஏற்கனவே கையில் தயாராக வைத்திருக்கும் டூப்ளிகேட் கார்டை தந்துவிடுவார். வயதானவர்களும் அந்த போலி கார்டை வாங்கி கொண்டு ஏமாற்றத்துடன் சென்றுவிடுவார்கள். இதன்பிறகு, ஒரிஜினல் கார்டை வைத்து வேறு ஏடிஎம் சென்று பணம் எடுத்து கொண்டு தப்பிவிடுவார் நவீன்குமார்.
எப்பவுமே இதே பொழப்பாக இருந்ததால்தான், நவீன்குமார் மீது நிறைய வழக்குகள் பதிவாகி, இவரை போலீசார் தேடி வந்திருக்கிறார்கள். இந்நிலையில், அவலூர்பேட்டையில் உள்ள எஸ்பிஐ வங்கி ஏடிஎம்மில், தேவிகா என்ற பெண்ணை ஏமாற்றி 15 ஆயிரம் ரூபாய் கொள்ளை போனதாக போலீசாருக்கு புகார் வரவும், உடனடியாக சென்று போலீசார் சோதனையிட்டனர்.
அப்போது, போலீசாரை பார்த்ததும் ஒருவர் தப்பி ஓட முயற்சிக்கவும், சுதாரித்த போலீசார், அவரை மடக்கி பிடித்து விசாரித்தனர். அப்போதுதான் அவர் நவீன்குமார் என்பது உறுதியானது. விசரணையில், இந்த ஒரு வருஷத்தில் மட்டும் 5 லட்சம் ரூபாய்க்குமேல இப்படியே கொள்ளை அடித்து வைத்திருக்கிறார் நவீன்குமார். இப்போதைக்கு 2.25 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்த போலீசார் நவீன்குமாரிடம் தொடர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications