பாஜகவுக்காக வந்தேனா.. 3 மணி நேரமாக ராமதாஸுடன் பேசியது என்ன? ஆடிட்டர் குருமூர்த்தி விளக்கம்!
விழுப்புரம்: பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் ஆடிட்டர் குருமூர்த்தி இடையிலான 3 மணி நேர சந்திப்பு நிறைவடைந்துள்ளது. நீண்ட கால நண்பரான ராமதாஸை சந்திக்க வந்ததாக கூறிய குருமூர்த்தி, பாஜகவுக்காக தைலாபுரம் வரவில்லை என்று தெரிவித்துள்ளார். மேலும் அன்புமணி தைலாபுரம் வந்ததே தெரியாது என்றும் விளக்கம் கொடுத்துள்ளார்.
தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், அதிமுக - பாஜக கூட்டணி உறுதியாகி இருக்கிறது. அடுத்தக் கட்டமாக பாஜக தரப்பில் பாமகவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியது. ஆனால் பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையிலான மோதல் உச்சத்தில் இருந்து வருகிறது. இந்த நிலையில் இன்று காலை அன்புமணி திடீரென தைலாபுரம் புறப்பட்டார்.

அன்புமணி - ராமதாஸ் சந்திப்பு
தைலாபுரம் வந்த அன்புமணி, சுமார் 30 நிமிடங்கள் ராமதாஸ் உடன் பேச்சுவார்த்தை நடத்திவிட்டு புறப்பட்டு சென்றார். அன்புமணி சென்ற மறுநிமிடமே ஆடிட்டர் குருமூர்த்தி மற்றும் அதிமுக மூத்த தலைவர் சைதை துரைசாமி ஆகியோர் தைலாபுரம் வந்தனர். ஜூன் 8ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மதுரை வருகிறார்.
தைலாபுரத்தில் குருமூர்த்தி
இதனால் ராமதாஸ் - குருமூர்த்தி இடையிலான சந்திப்புக்கு அமித் ஷா வருகையே காரணம் என்று பார்க்கப்பட்டது. 2 வாரங்களுக்கு முன்பாக ஏற்கனவே சைதை துரைசாமி தைலாபுரம் வந்து ராமதாஸை சந்தித்திருந்தார். தற்போது மீண்டும் வந்த சைதை துரைசாமி, உடன் குருமூர்த்தியையும் அழைத்து வந்திருப்பது பல்வேறு விவாதங்களை எழுப்பி இருக்கிறது.
3 மணி நேரம் ஆலோசனை
இதன்பின் தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் குருமூர்த்தி இடையிலான சந்திப்பு சுமார் 3 மணி நேரம் வரை நீடித்தது. இதன்பின் காரில் வெளியில் வந்த குருமூர்த்தி செய்தியாளர்களை சந்தித்து, நான் பாஜகவுக்காக தைலாபுரம் வரவில்லை. ராமதாஸ் உடன் எனக்கு நீண்ட கால நட்பு இருக்கிறது. நண்பனை பார்க்கவே வந்தேன். வேறு எதுவும் இல்லை என்று தெரிவித்தார்.
குருமூர்த்தி விளக்கம்
தொடர்ந்து அன்புமணியும் தைலாபுரம் வந்தாரே என்ற கேள்விக்கு, அன்புமணி தைலாபுரம் வந்தாரா என்று அருகில் இருந்த சைதை துரைசாமியிடம் அதிர்ச்சியாக கேள்வி எழுப்பினார். தொடர்ந்து, அன்புமணி தைலாபுரம் வந்தது எனக்கு தெரியாது. பிரச்சனை நடக்கும் இடங்களுக்கும் நான் செல்லவில்லை. நான் சொல்லும் இடங்களில் பிரச்சனை உள்ளது என்று தெரிவித்தார்.
-
தேர்தல் தேதி அறிவிச்சாச்சு! தந்தை-மகன் பிரச்சனை நாளை சரியாகும்! கட்சி? பாமக வழக்கில் நீதிபதி கேள்வி -
லிஸ்ட்டில் 4 தொகுதிகள்.. சவுமியா அன்புமணி களமிறங்கும் தொகுதி எது தெரியுமா? அன்புமணி போடும் பிளான் -
கோவையில் பெண் காவலருக்கு பாலியல் தொல்லை! எஸ்.பி.கைது! வேலியே பயிரை மேய்ந்தால்..! அன்புமணி கண்டனம் -
வெளியானது IANS கருத்துக்கணிப்பு ரிசல்ட்: 5 மாநில சட்டசபை தேர்தல்களில் ஆட்சியைப் பிடிக்கப்போவது யார்? -
ஸ்டன் ஆன விஜய்.. "80 சீட்+ துணை முதல்வர்" எல்லாம் ஓகே.. ஆனா ஒரு விஷயத்தை யோசிக்கும் தவெக தலைமை -
என்னது துணை முதலமைச்சர் பதவி தராங்களா.. விஜய் தான் முதலமைச்சர்.. செங்கோட்டையன் தடாலடி -
சல்லி சல்லியாக நொறுங்கிடுச்சே.. துபாய் அஸ்திவாரமே ஆடுதுங்க.. 'சொர்க்க பூமி' இப்படி ஆகிடுச்சே! -
விஜய் ஏமாத்திட்டாரு.. பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்.. திமுகவில் இணையும் செங்கோட்டையன்? -
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு! -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
Election Exclusive: நெருங்குது கிளைமேக்ஸ்..தாமரையுடன் கைகோர்க்கும் விசில்! நள்ளிரவில் ஹோட்டல் மீட்டிங்.. டோட்டல் மாற்றம் -
விஜய்க்கு புது ஆஃபர் கொடுக்கும் பாஜக? 80 தொகுதி + துணை முதல்வர் பதவி! டெல்லியில் பரபர பாலிடிக்ஸ்












Click it and Unblock the Notifications