Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பிரபல சினிமா டைரக்டர் நறுக்.. "ஏன் கத்தணும், கதறணும், உருளணும்? இனியாவது திருந்துங்க".. கவனித்த திமுக

Subscribe to Oneindia Tamil

விழுப்புரம்: Gowthaman, cinema director, film director gowthaman slams dmk, vck mp ravikumar, சினிமா டைரக்டர், டைரக்டர் கவுதமன், கவுதமன் பேட்டி, திமுக, விசிக ரவிக்குமார், விழுப்புரம் மேல்பாதி,

விழுப்புரம் மாவட்டம், கோலியனூர் அருகேயுள்ள மேல் பாதி கிராம விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது.. அங்குள்ள தர்மராஜா திரெளபதி அம்மன் கோவிலில் பட்டியலின மக்கள் சாமி தரிசனம் செய்ய, வன்னியர் சமூக மக்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்..

Cinema film director gowthaman says senthil balaji is finance source of dmk and slams vck also

இதையடுத்து, மாவட்ட நிர்வாகத்தினர் 8 முறை பேச்சுவார்த்தை நடத்தியும் அது தோல்வியில் முடிந்தது. இதனையடுத்து வருவாய் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன் தலைமையிலான அதிகாரிகள் கோவிலுக்கு கடந்த ஜுன் 7ம் தேதி சீல் வைத்தனர்...

மேலும் 2 தரப்பிலும் கோவில் விவகாரம் தொடர்பாக எழுத்து பூர்வமாக விளக்கம் அளித்தனர்.. எனவே, அந்த கோயிலுக்கு வருவாய் துறையினர் பூட்டி சீல் வைத்துள்ளனர்.வெளி ஆட்கள் கிராமத்துக்குள் வர தடைவிதிக்கப்பட்டுள்ளது. கோவிலை திறந்து பூஜை செய்வதற்கு அர்ச்சகருக்கு மட்டும் அனுமதி அளிக்க வேண்டுமென கோரிக்கைகள் எழுந்துள்ளன.
பிரபல டைரக்டர்: இந்நிலையில், பிரபல திரைப்பட டைரக்டரும், தமிழ் பேரரசு கட்சியின் பொதுச்செயலாளருமான வ. கெளதமன் மேல்பாதி கிராமத்துக்குள் சென்று, அங்குள்ள மக்களிடம் பேசினார்... இந்த விஷயம் அதற்குள் வளவனூர் போலீஸ் ஸ்டேஷனுக்கு சொல்லவும், சிறிது நேரத்தில் போலீஸார் விரைந்து வந்தனர்.. கௌதமனை அங்கிருந்து வெளியேற்றி, விழுப்புரம் மாவட்ட எஸ்பி ஆபீசுக்கு அழைத்துவந்தனர்.

எஸ்பி. கோ.சஷாங்க் சாயை சந்தித்த கவுதமன், மேல்பாதி பிரச்சினை குறித்து கேட்ட றிந்தார். பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி தந்த வ.கெளதமன், "மேல்பாதி கிராமத்தில் உள்ள திரெளபதி அம்மன் கோயிலில் வழிபாடு மேற்கொள்வதில் எந்தவிதமான பிரச்சினையும் இல்லை. அரசியல் கட்சியினர் பெரிதுப்படுத்தியதன் காரணமாகவே இப்பிரச்சினையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

Cinema film director gowthaman says senthil balaji is finance source of dmk and slams vck also

சிறைவைப்பு: இதனால் கோவில் சாமி சிறை வைக்கப்பட்டு உள்ளது.. இதற்கு அந்த மக்கள் பழியை சுமந்து கொண்டு இருக்கிறார்கள்.. அமைச்சர் பொன்முடி இதில் சாராயம் குடித்து இறந்த வழக்கினை மறைப்பதற்காக பொய் பிரச்சாரம் செய்துள்ளார்.. திமுகவுடன் விசிக கட்சி கூட்டணியில் இருக்க வேண்டும் என்பதால் இந்த விவகாரத்தினை எம்பி ரவிக்குமார் பெரிதாக்கி உள்ளார்..

தமிழகத்தில் விரைவில் நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் திமுகவின் கூட்டணி கட்சியினர் தங்களது இருப்பை உறுதி செய்து கொள்வதற்காகவே திட்டமிட்டு இதை தூண்டி விட்டுள்ளனர். கோயில் பிரச்சினை தொடர்பாக மாவட்ட நிர்வாகம் சார்பில் 7 முறை அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டும் தீர்வு காணப்படவில்லை. திரெளபதி அம்மன் கோயில்இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமானது என்பதற்கான ஆதாரமும் காட்டப்படவில்லை.

திருடுற கூட்டம்: அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டுள்ளார்.. செந்தில் பாலாஜி திமுகவிற்கே நிதி களஞ்சியம்.. அவரே பதவி விலகி வேண்டும்... அவர் தவறு செய்யவில்லை என்றால் ஏன் கத்தனும், கதறனும், உருளனும்? செந்தில் பாலாஜிக்கு நடைபெற்றதை ரசிக்க முடியல.. ஆனாலும், திருடுகிற கூட்டம் இனியாவது திருந்துகள்.. யார் தப்பு செய்தாலும் யோசிக்காமல் உடனே அவர்களை பதவியில் இருந்து தூக்கி எறியணும்" என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+