"வெறி".. கல்லூரி மாணவி ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை.. வயல்வெளியில் பயங்கரம்.. சுத்துப்போட்ட போலீஸ்
இன்று அதிகாலை 5 மணியளவில் இயற்கை உபாதை கழிப்பதற்காக, வீட்டுக்கு அருகே உள்ள வயல்வெளிக்கு தரணி சென்றிருக்கிறார். ஆனால், நீண்டநேரமாகியும் அவர் வரவில்லை.
விழுப்புரம்: விழுப்புரத்தில் இன்று அதிகாலை நடந்த அதிபயங்கர சம்பவம் அந்த மாவட்டத்தையே பற்றி எரிய வைத்துள்ளது. ஏதோ ரவுடியை கொலை செய்வதை போல கல்லூரி மாணவி ஒருவர் ஓட ஓட வெட்டி படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்.
இந்த சம்பவம் குறித்து நடத்தப்பட்டு வரும் விசாரணையில் அடுத்தடுத்து திகிலூட்டும் தகவல்கள் கிடைத்து வருகின்றன. எனினும், போலீஸார் இதுபற்றி முழுமையாக கூற மறுக்கிறார்கள். விசாரணை முழுமையாக முடிவடைந்ததும் அனைத்து விவரங்களும் வெளியிடப்படும் என போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நேற்று வரை அனைவரிடமும் சிரித்து பேசி விளையாடிக் கொண்டிருந்த ஒரு இளம்பெண், இன்று காலை ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பதை பார்த்து அவரது பெற்றோரும், உறவினர்களும் கதறி அழுதது கல் நெஞ்சையும் கரைக்கும் விதமாக இருந்தது.

பதற வைக்கும் கொலைகள்..
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக இளம்பெண்கள் கொடூரமாக வெட்டிக் கொல்லப்படுவது அதிகரித்துள்ளது. 2016-ம் ஆண்டு நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதி என்ற இளம்பெண் கொலை செய்யப்பட்டது தமிழகத்தை ஒரு உலுக்கு உலுக்கியது. ஆனால், அதன் பிறகு இளம்பெண்கள் கொலை செய்யப்படுவது சர்வ சாதாரணமாக மாறிவிட்டது. பெரும்பாலும் ஒருதலை காதல், காதல் முறிவு போன்ற பிரச்சினைகளே இந்தக் கொலைகளுக்கு மூலக்காரணமாக இருக்கிறது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவியை அவரது ஆண் நண்பர் ரயிலில் தள்ளி கொலை செய்தான். தன்னை காதலிக்க மறுத்ததால் ஆத்திரத்தில் இந்த படுபாதக செயலில் அவன் ஈடுபட்டான். அதேபோல, தாம்பரம் ரயில் நிலையத்தில் குரோம்பேட்டையை சேர்ந்த கல்லூரி மாணவி அவரது முன்னாள் காதலனால் கழுத்தறுத்து கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.

நர்சிங் மாணவி
இந்த சம்பவங்கள் ஏற்படுத்திய அதிர்ச்சி அடங்குவதற்குள்ளாக, தற்போது விழுப்புரத்தில் ஒரு பயங்கர சம்பவம் அரங்கேறியிருக்கிறது. அதுகுறித்து இங்கு பார்க்கலாம். விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள ராதாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் தரணி (19). இவர் விழுப்புரத்தில் உள்ள நர்சிங் கல்லூரி ஒன்றில் முதலாமாண்டு படித்து வந்தார். அனைவரிடமும் சகஜமாக பழகக்கூடியவர் என்பவதால் தரணிக்கு தோழிகளும், நண்பர்களும் அதிகம் எனக் கூறப்படுகிறது.

இயற்கை உபாதைக்காக..
இதனிடையே, நேற்று மாலை வழக்கம் போல கல்லூரி முடிந்து வந்த மாணவி தரணி, வீட்டில் உள்ளவர்களிடம் எப்போதும் போல பேசிவிட்டு உறங்கச் சென்றார். இந்நிலையில், இன்று அதிகாலை 5 மணியளவில் இயற்கை உபாதை கழிப்பதற்காக, வீட்டுக்கு அருகே உள்ள வயல்வெளிக்கு தரணி சென்றிருக்கிறார். ஆனால், நீண்டநேரமாகியும் அவர் வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த அவரது பெற்றோர் வயல்வெளிக்கு சென்று பார்த்துள்ளனர். அப்போது அங்கு பார்த்த காட்சி அவர்களை அதிர்ச்சியில் உறைய வைத்தது.

ரத்தக்களரி.. சிக்கும் மிருகம்..
கழுத்து, தலை உள்ளிட்ட இடங்களில் ஆழமாக வெட்டு விழுந்த நிலையில், ரத்த வெள்ளத்தில் தரணி அங்கு இறந்து கிடந்தார். இதை பார்த்த அவரது பெற்றோரும், உறவினர்களும் கதறி அழுதனர். இதுகுறித்து தகவலறிந்த போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து, தரணியின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக விழுப்புரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதுகுறித்து போலீஸார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. மதுரப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர்தான் இந்த வெறிச்செயலில் ஈடுபட்டிருக்கிறார் என முதல்கட்ட விசாரணையில் தெரியவந்திருப்பதாக போலீஸார் தெரிவித்தனர். காதல் விவகாரத்தில் இந்தக் கொலை நடந்திருப்பதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications