Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கடலூர் மாநாட்டுக்கு பணம் கேட்டு குவாரி உரிமையாளருக்கு மிரட்டல்.. தேமுதிக நிர்வாகி கைது

Subscribe to Oneindia Tamil

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் கிளியனூர் அருகே தென்கோடி பாக்கம் கிராமம் உள்ளது. இங்கு சென்னையை சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவர் கல்குவாரி நடத்தி வருகிறார். இந்தநிலையில் தே.மு.தி.க. கிளியனூர் ஒன்றிய செயலாளர் தணிகைவேல் என்பவர் கடலூர் மாநாட்டுக்கு பணம் கேட்டு குவாரி உரிமையாளரை மிரட்டிதாக புகார் எழுந்தது.இந்த புகாரின் பேரில் தே.மு.தி.க. நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார். இன்னொரு நிர்வாகியை போலீசார் தேடி வருகிறார்கள்.

கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள பாசார் கிராமத்தில் சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் தே.மு.தி.க.வின் மக்கள் உரிமை மீட்பு மாநாடு 2.0 நாளை மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் தே.மு.தி.க. கூட்டணி குறித்து அறிவிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் இந்த மாநாடு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. மாநாட்டிற்காக கடந்த டிசம்பர் மாதம் பந்தக்கால் நடப்பட்டு, அனைத்து ஏற்பாடுகளும் முழுவீச்சில் செய்யப்பட்டிருக்கிறது. சுமார் 150 ஏக்கரில் மாநாட்டு பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் நாளை பிற்பகல் 2.30 மணிக்கு பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மாநாட்டு திடலில் கட்சி கொடியை ஏற்றி வைக்கிறார்.

dmdk Cuddalore

தொடர்ந்து 3.23 மணிக்கு பரதநாட்டியம், கேப்டனை பற்றிய கதை, 3.40 மணிக்கு பட்டிமன்றம், மாலை 4.40 மணிக்கு கலைக்குழுவினரின் நடனம், பரத நாட்டிய குழுவினரின் நிகழ்ச்சி, கிராமிய கலைக்குழு நிகழ்ச்சி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கிறது. இந்த மாநாட்டில் தேமுதிக தொண்டர்கள் பலர் பங்கேற்க வருகிறார்கள்

இதனிடையே விழுப்புரம் மாவட்டம் கிளியனூர் அருகே தென்கோடி பாக்கம் கிராமம் உள்ளது. இங்கு சென்னையை சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவர் கல்குவாரி நடத்தி வருகிறார். இந்தநிலையில் தே.மு.தி.க. கிளியனூர் ஒன்றிய செயலாளர் 35 வயதாகும் தணிகைவேல், நல்லாவூர் கிராமத்தை சேர்ந்த தே.மு.தி.க. பிரமுகரான 35 வயதாகும் கலியமூர்த்தி ஆகியோர் நேற்று கல் குவாரிக்கு சென்று, பாலகிருஷ்ணனிடம், கடலூர் மாவட்டம் வேப்பூரில் நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெறும் தே.மு.தி.க. மாநாட்டுக்கு நன்கொடையாக பணம் தருமாறு கேட்டுள்ளனர். ஆனால் அவர் பணம் கொடுக்க மறுத்துவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள், பாலகிருஷ்ணனை மிரட்டியதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக கிளியனூர் போலீஸ் நிலையத்தில் பாலகிருஷ்ணன் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தே.மு.தி.க. ஒன்றிய செயலாளர் தணிகைவேலை நேற்று கைது செய்து, அடைத்தனர். கலியமூர்த்தியை தேடி வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+