இங்க பாருங்க.. சிறையில் இருந்தே நகராட்சி தேர்தலில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளர்!
விழுப்புரம்: திண்டிவனம் நகராட்சி திமுக வேட்பாளர் சிறையில் இருந்தபடியே தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளரை தோற்கடித்துள்ளார்.
தமிழக நகர்புற உள்ளாட்சி தேர்தல் ஓட்டு எண்ணிக்கை நேற்று நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. வேட்பாளர்கள் பெற்ற ஓட்டுகள், வெற்றி தோல்வியை நிர்ணயித்த ஓட்டுகள் குறித்த சுவாரசிய விஷயங்கள் தொடர்ச்சியாக வெளியாகி வருகின்றன.
இந்நிலையில் தான் நகராட்சி வார்டு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்ட திமுக வேட்பாளர் சிறையில் இருந்தபடியே வெற்றி பெற்றுள்ள விபரம் வெளியாகி உள்ளது. அதுபற்றிய முழுவிபரம் வருமாறு:

தேர்தல் பணி
விழுப்புரம் மாவட்டத்தில் விழுப்புரம், திண்டிவனம், கோட்டகுப்பம் எனும் 3 நகராட்சிகள் உள்ளன. அறங்கண்டநல்லூர், அனந்தபுரம், செஞ்சி, திருவெண்ணைநல்லூர், மரக்காணம், வளவனூர், விக்ரவாண்டி என 7 பேரூராட்சிகள் உள்ளன. இந்த 10 நகர்புற உள்ளாட்சி அமைப்புகளில் திமுக தனது கூட்டணி கட்சியுடனும், அதிமுக உள்ளிட்ட பிற கட்சிகள் தனித்தனியேவும் தேர்தல் பணியை மேற்கொண்டன.

14வது வார்டு
இதில் திண்டிவனம் நகராட்சியில் மொத்தம் 33 வார்டுகள் உள்ள. இதில் திமுக சார்பில் 13வது வார்டில் பாபு (வயது 39) என்பவர் போட்டியிட விருப்ப மனு செய்தார். அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. வேட்புமனு செய்து வார்டில் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டார். பிப்ரவரி 19ல் விறுவிறுப்பாக ஓட்டுப்பதிவு நடந்தது.

தேர்தல் தகராறு
அப்போது திடீரென்று திமுக, அதிமுக இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இது கைகலப்பாக மாறியதால் ஒருவரையொருவர் தாக்கி கொண்டனர். இதில் அதிமுக வேட்பாளர் சுதா என்பவர் காயமடைந்தார். இவர் விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர்.

வேட்பாளர் கைது
இந்த தகராறு தொடர்பாக இருதரப்பினரும் ரோஷனை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். போலீசார் விசாரணை நடத்தினர். இருதரப்பினர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் திமுக வேட்பாளர் பாபு உள்பட 5 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதற்கு திமுக கட்சியினர் கடும் எதிர்ப்பை பதிவு செய்தனர்.

சிறையில் இருந்து வெற்றி
இந்நிலையில் தான் நகர்புற உள்ளாட்சி தேர்தலில் பதிவான ஓட்டுக்கள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் திண்டிவனம் நகராட்சியில் 13வது வார்டில் பாபு வெற்றி பெற்றார். இவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் சுதாவை தோல்வியடைய செய்தார். இருப்பினும் தேர்தல் தகராறில் சிறையில் உள்ளதால் பாபுவால் வெற்றியை கொண்டாட முடியவில்லை.
-
திருச்சி திமுக மாநாட்டில் கமகமக்கும் பிரியாணி.. 10 லட்சம் பேருக்கு சுடச்சுட ரெடி! -
ONOE: "ஒரே நாடு ஒரே தேர்தல்.. நோயை விடக் கொடிய மருந்து" - முதல்வர் ஸ்டாலின் கடும் எதிர்ப்பு! -
கோவையில் ஆரம்ப சுகாதார நிலையத்தை வீடாக மாற்றிக்கொண்ட திமுக பிரமுகர்.. அண்ணாமலை வீடியோ -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு? -
திமுகவுக்கு எதிராக மதுரையில் பிரம்மாண்ட அஸ்திரம்.. அதிமுக எடுத்த பெரிய முடிவு -
திமுக ஆட்சியில் 6 மாதம் மும்மொழிக் கொள்கை! அமெரிக்காவில் அண்ணா சொன்ன விளக்கம்! -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
இந்த நாளுக்காகத் தான் வெயிட்டிங்! திருச்சியை திணற வைக்கும் திமுக! ஸ்டாலின் கையில் ‘மெகா’ அஸ்திரம்! -
விசிக முதல் தேமுதிக வரை.. திமுக கூட்டணியில் போர்க்கொடி உயர்த்திய 6 கட்சிகள்.. தொகுதி பங்கீட்டில் இழுபறி -
காங்கிரஸ் போட்டியிடும் 28 தொகுதிகள் என்னென்ன? டெல்லி தலைகளுடன் சென்னையில் நடந்த முக்கிய ஆலோசனை! -
ஸ்டாலினின் கையில் அந்த சர்ப்ரைஸ் லிஸ்ட்.. திமுக துரைமுருகன் முதல் பொன்முடி வரை! 15 விஐபிகளுக்கு கிலி? -
பழைய ஓய்வூதிய திட்டம் என்னவானது? கூரை ஏறி கோழி பிடிக்க முடியாத திமுக அரசு! அன்புமணி கடும் விமர்சனம்












Click it and Unblock the Notifications