திமுக வெளிச்சத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இல்லை! அதிரடியாக பேசிய மாநில செயலாளர் பெ சண்முகம்
விழுப்புரம்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய மாநில செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள பெ சண்முகம் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது திமுக வெளிச்சத்தில் சிபிஎம் இல்லை என்றும், அவ்வாறு கூறுவது பொறுத்தமற்றது என்றும் கூறினார். மேலும், மத வெறி சக்திகளை ஒழிக்க திமுகவுடன் இணைந்து சிபிஎம் செயல்படும் என்றும் அவர் கூறினார்.
கே பாலகிருஷ்ணனின் பதவிக்காலம் நிறைவடைந்ததை அடுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய மாநில செயலாளராக பெ சண்முகம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மாநிலச் செயலர் பதவிக்கு போட்டியிட விரும்பவில்லை என்று கே பாலகிருஷ்ணன் கூறியதையடுத்து, விழுப்புரத்தில் நடந்த மாநில மாநாட்டில் பெ சண்முகம் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.

தொடர்ந்து மாநில செயலாளராக பதவியேற்ற பின் முதல் முறையாக செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் திமுக வெளிச்சத்தில் சிபிஎம் இல்லை. அவ்வாறு கூறுவது பொறுத்தமற்றது என்று கூறினார். பெ சண்முகம் கூறியதாவது:-
ஊர்வலம், போராட்டம், ஆர்ப்பாட்டம் எல்லாம் இந்திய அரசியல் சாசனம் இந்திய மக்களுக்கு வழங்கியிருக்க கூடிய அடிப்படையான உரிமைகள். இந்த அடிப்படையான உரிமைகளை மறுப்பதற்கு எந்த அரசாங்கத்திற்கும் உரிமை கிடையாது. அன்றைக்கு நடந்தது எங்களுடைய கட்சியினுடைய மாநில மாநாட்டினுடைய பேரணி தான். இந்த பேரணிக்கு கூட விழுப்புரம் மாவட்ட காவல்துறையினர் அனுமதி கொடுக்கவில்லை.
இதனால் தான் அப்படி கண்டனம் தெரிவிக்கப்பட்டது. ஒரு கட்சியினுடைய மாநில மாநாட்டுக்கே பேரணி நடத்த அனுமதி கொடுக்கப்படாததை எக்காரணத்தை கொண்டும் ஏற்க முடியாது. இதற்காக தான் பாலகிருஷ்ணன் தங்கள் கண்டனத்தை தெரிவித்து இருந்தார். இதனை நிச்சயமாக திமுக தலைமை புரிந்துகொள்ளும்.
திமுக கூட நிறைய நேரம் உறவாக இருந்து இருக்கோம். பல நேரங்களில் எதிர் அணியில் இருந்து இருக்கிறோம். வேறொரு அணியில் இருந்து இருக்கிறோம். இவங்களால் தான் எங்களுக்கு வெளிச்சம் கிடைக்கிறது. என்று சொல்வதெல்லாம் அதீத வார்த்தை. நிச்சயமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தங்கள் பலத்திற்கு ஏற்ப மக்கள் நலன் சார்ந்த பிரச்சினைகளில் சமரசமற்ற போராட்டத்தை நடத்துவோம்.
இதன் மூலமாக தான் மக்கள் மத்தியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செல்வாக்கு பெற்ற கட்சியாக இருக்கிறதே தவிர, எதோ திமுக கட்சியின் வெளிச்சத்தில் தான் சிபிஎம் செயல்பட்டு வருவதாக திமுக தலைமை, முரசொலியில் செய்தி வெளியிட்டிருப்பது பொறுத்தமானது இல்லை என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
உழைக்கும் மக்களுக்கு ஆதரவாகவே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி போராடும். ஜனநாயக முறையில் போராட்டம் நடத்துவோம். மத வெறி சக்திகளை ஒழிக்க திமுகவுடன் இணைந்து சிபிஎம் செயல்படும். மாநில அரசின் அதிகாரத்தை பறிக்கும் நடவடிக்கையில் மத்திய பாஜக அரசு செயல்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
-
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications