வீரபாண்டி கிராம சபை கூட்டத்திலிருந்து பாதியிலேயே வெளியேறினார் அமைச்சர் பொன்முடி.. பரபரப்பு!
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் வீரபாண்டி கிராம சபை கூட்டத்திலிருந்து அமைச்சர் பொன்முடி பாதியிலேயே வெளியேறினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
நாடு முழுவதும் காந்தி ஜெயந்தி விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பல நலத்திட்ட உதவிகள் செய்யப்படுகின்றன. கிராமங்கள் மேம்பட்டால்தான் இந்த ஒரு முன்னேறும் என காந்தி கூறியிருந்தார்.
அது போல் விவசாயிகள் இந்த நாட்டின் முதுகெலும்பு என்றும் கூறியிருந்தார். இதை கருத்தில் கொண்டு ஒவ்வொரு ஆண்டும் காந்தி பிறந்தநாள் அன்று கிராம சபை கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

அமைச்சர்கள்
இந்த கூட்டத்தில் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், உயரதிகாரிகள் கலந்து கொண்டு மக்களின் குறைகளை கேட்டறிவர். அந்த வகையில் இன்றைய தினம் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தமிழகத்தில் கிராமங்களில் கிராம சபை கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அந்த வகையில் விழுப்புரம் மாவட்டம் வீரபாண்டியில் கிராம சபை கூட்டம் இன்று நடந்தது.

அமைச்சர் பொன்முடி
இந்த கூட்டத்தில் அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டார். அப்போது அவரிடம் குடிநீர், கழிவு நீர் கால்வாய் வசதிகள் குறித்து கிராம மக்கள் கேள்வி எழுப்பினர். குடிநீருக்காக தாங்கள் மிக நீண்ட தூரம் செல்வதாகவும் வேதனை தெரிவித்தனர். மழைக்காலம் வரும் நிலையில் கழிவுநீர் கால்வாய்களை சீரமைக்கவும் கோரிக்கை எழுந்தது.

10 நாட்கள் அவகாசம்
அப்போது அவர்களுடயை கோரிக்கைகளை கேட்ட பொன்முடி, இன்னும் 10 நாட்களில் தீர்வு காணப்படும் என உறுதியளித்தார். ஆனால் அமைச்சரின் உறுதிமொழியை ஏற்காத பொதுமக்கள் ஆட்சிக்கு வந்து ஓராண்டு ஆகிறது. அதுவரை செய்யாத நீங்கள் இந்த 10 நாட்களிலா செய்ய போகிறீர்கள் என வாக்குவாதம் செய்தனர்.

அதிமுக ஒன்றிய கவுன்சிலர்
அவர்களை சமாதானப்படுத்த அமைச்சர் பொன்முடியும் அவருடன் இருந்தவர்களும் முயற்சித்தனர். ஆனால் அவர்கள் தொடர்ந்து வாக்குவாதம் செய்து கொண்டே இருந்தனர். இந்த நிலையில் அதிமுக ஒன்றிய கவுன்சிலர் ரேவதிதான் ஆட்களை உள்ளே இறக்கி பிரச்சினையை பெரிதாக்குகிறார் என புகார் கூறிய அமைச்சர் பொன்முடி அங்கிருந்து வெளியேறினார்.

அமைச்சர் மா சுப்பிரமணியன்
கிராம சபை கூட்டத்திலிருந்து அமைச்சர் பொன்முடி பாதியிலேயே வெளியேறதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதே போல் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஒரு பயிற்சி வகுப்பிற்கு சென்ற அமைச்சர் மா சுப்பிரமணியன் ஆட்கள் குறைவாக உள்ளதாகவும் பயிற்சி வகுப்பிற்கு உரிய ஏற்பாடுகளை செய்யவில்லை என்று கூறியும் அங்கிருந்து பாதியிலேயே வெளியேறினார்.
-
கட்டுக்கட்டாக பணம்.. சென்னையில் திமுக எம்பி ஜெகத்ரட்சகன் நிறுவன காரில் ரூ.60 லட்சம் பறிமுதல் -
"ஆபாசமாக பேசி மிரட்டல் விடுக்கும் விர்ச்சுவல் வாரியர்ஸ்".. விஜய் மீது ரஞ்சனா நாச்சியார் புகார்! -
தவெக பரப்புரைக்கு தடைபோடுவதா.. திடீர் பள்ளம், தடுப்பு எங்கிருந்து வந்துச்சு? கடுப்பில் விஜய் அறிக்கை -
திமுக அமைச்சர்களின் தொகுதிகளில் களம் இறங்கும் அதிமுக வேட்பாளர்கள் யார் யார்? இதோ லிஸ்ட்! -
காங்கிரஸ் மீது கடும் அப்செட்டில் ஸ்டாலின்.. வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்துக்கு கிளம்ப திட்டம்! -
2026 தேர்தல் யார் ஜெயிப்பார்கள்? ‘நீயா நானா’வில் ஜோதிடர்கள் உடைத்த ரகசியம்! பெண்கள் ஓட்டு, மறு எலக்சன் இருக்காமே! -
DMK Vs ADMK: தமிழக தேர்தல்களில் அதிக தொகுதிகளை வென்ற கட்சி எது தெரியுமா? சுவாரஸ்யம்! -
கோவையில் போட்டியிடும் செந்தில் பாலாஜி.. நிர்வாகிகளுக்குப் பறந்த மெசேஜ் -
காங்கிரஸ் போட்டியிடும் 16 தொகுதிகள் அறிவிப்பு.. சிட்டிங் சீட்களில் 2-ஐ விட்டுக் கொடுத்தது காங்! -
164 தொகுதிகளில் களமிறங்கும் திமுக! வேட்பாளர்கள் யார்? மாலையில் அறிவிக்கும் ஸ்டாலின்? -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
திமுக vs காங்கிரஸ்.. 5 தொகுதிகளில் நேரடி போட்டி! பீகார் ஸ்டைலில் புதுவையிலும் நடக்கும் சம்பவம்












Click it and Unblock the Notifications