இப்படியும் கூட சாவு வரலாம்.. கள்ளக்குறிச்சியை அதிர வைத்த முருகனின் மரணம்!
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் பாலத்தில் அமர்ந்து மது அருந்திய முருகன் என்பவர், அதிக போதையால் தண்ணீர் தேங்கி இருந்த பள்ளத்தில் விழுந்தார். அதிக போதையால் எழுந்துவரமுடியாமல் தண்ணீர் மூச்சுத்திணறி உயிரிழந்தார்,
குடி போதை பலரது உயிரை பறித்து வருவது கண்கூடாக தெரிகிறது. மது குடிக்க பணம் கிடைக்காததால் குடிகார்கள் வன்முறையில் இறங்குவதால் குடும்பமே சோகத்தில் மூழ்கும் அளவுக்கு கொலைகள் நடக்கிறது. அடிதடிகள் நடக்கிறது
மதுவால் பல்வேறு குடும்பங்கள் அழிந்து கொண்டுதான் வருகின்றன. மது போதையில் ஏற்படும் விபத்துக்களால் பேரிழப்புகளும் ஏற்படுகின்றன. மதுபோதை ஆசாமிகள் உயிரிழப்பதுடன் அப்பாவிகளும் இறப்பது நடந்து கொண்டுதான் இருக்கிறது. இந்நிலையில்மதுபோதையால் 40வயது நபர் கள்ளக்குறிச்சியில் பலியாகி உள்ளார்.

பாலத்தில் மது
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அண்ணா நகர் மூன்றாவது தெருவை சார்ந்த முருகன் (40) என்பவர் திருவெண்ணைநல்லூர் சாலையில் உள்ள பாலத்தின் மீது இரவு உட்கார்ந்து மது அருந்தியுள்ளார்.

தண்ணீர் விழுந்து பலி
மது போதை அதிகமானதால் நிலைதடுமாறி அருகில் உள்ள தண்ணீர் தேங்கியிருந்த பள்ளத்தில் விழுந்துள்ளார் பின்னர் அவரால் அதிக போதையில் இருந்ததால் தண்ணீரில் இருந்து எழுந்து வர முடியாமல் நிலை தடுமாறி தண்ணீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

மிதந்த உடல்
இதற்கிடையே இரவு முழுவதும் உறவினர்கள் தேடியும் முருகன் கிடைக்காததால் காலையில் திருவெண்ணைநல்லூர் சாலை பாலத்தின் அருகே தண்ணீரில் யாரோ இறந்து உடல் மிதக்கிறது என்று அந்த வழியாக வாக்கிங் சென்றவர்கள் பார்த்துச் கூறியிருக்கிறார்கள்.

போலீஸ் வருகை
அக்கம்பக்கத்தினர் அங்கு சென்று பார்க்கும் போது ஒரு ஆண் சடலம் மிதந்து. பின்னர் காவல் துறைக்கு தகவல் தெரிவித்ததால் காவலர்கள் சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றி தரைக்கு கொண்டு வந்து பார்த்தனர். அவர் அண்ணாநகர் 3வது தெருவை சேர்ந்த முருகன் என்பது அக்கம் பக்கத்தினர் தெரிவித்தனர்.

உளுந்தூர்பேட்டையில் பரபரப்பு
பின்னர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மது போதை அதிகமானதால் தண்ணீர்ல் விழுந்து குடிபோதை ஆசாமி உயிரிழந்த சம்பவம் உளுந்தூர்பேட்டையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications