குடிச்சு சாகறாங்க.. தாலி அந்து போகுது.. பறையடித்தபடி வந்த பிரகலதாவிடம் குமுறிய பெண்கள்
Recommended Video
விழுப்புரம்: ஊர் மக்களையே அதிர வைத்து கட்டி இழுத்து கொண்டுவந்துவிட்டது அந்த பறை சத்தம்! பறையை அடித்தது இசைக்கலைஞர்கள் இல்லை.. விழுப்புரம் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பிரகலதா தான்!
விழுப்புரம் தனி தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பாக களம் இறங்கி உள்ளார் பிரகலதா என்ற பெண் வேட்பாளர்.
திருமதி பிரகலதா ராம், எம்ஏ எம்எட் படித்திருக்கிறார். கொஞ்ச காலம் பேராசிரியராகவும் வேலை பார்த்திருக்கிறார். 8 வழிச்சாலைக்கு எதிராக போராடி சிறை சென்ற முதல் பெண் என்பது மறைக்கப்பட்ட உண்மை!
டிரம்ஸ் சத்தம்
எல்லா கட்சிக்காரர்களும் பிரச்சாரத்திற்கு முன்பு டிரம்ஸ் அடித்து மக்களை அலர்ட் செய்யும்போது, இந்த கட்சி மட்டும் பறையை கையில் எடுத்துள்ளது. அதுவும் வேட்பாளரான பிரகலதாவே பறையை அடித்து வாக்கினை திரட்டி வருகிறார்.
இடுப்பில் செருகிய புடவை.. ஏற்றி வாரிய கொண்டை.. கையில் துடைப்பக்கட்டை.. யார் இந்த பிரகலதா!
கரும்பு விவசாய சின்னம்
"இந்த விழுப்புரத்துல நிறைய பேர் குடிச்சு குடிச்சு சாகறாங்க.. எங்க தாலி அறுது.. நீங்கதாம்மா ஏதாவது செஞ்சு இந்த டாஸ்மாக்கை எடுத்துடணும்" என்று பிரகலதாவிடம் தொகுதி பெண்கள் தங்களையும் அறியாமல் கண்ணீர் மல்க கேட்கிறார்கள். இவர்களிடம் உறுதி அளித்து பிரச்சாரம் செய்து வரும் பிரகலதா, பறை அடித்தபடியே கரும்பு விவசாய சின்னத்துக்கு ஓட்டு போடுங்கள் என்றும் கேட்டு வருகிறார்.
வேகமாக அடிக்கிறார்
ஒரு பெண் வேட்பாளர், கையில் பறையை எடுத்து கொண்டு தெருத் தெருவாக அடித்து வாக்கு சேகரித்து வருவது கிராம மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி வருகிறது. இசை கலைஞர்களை போலவே பறையை வேகமாக அடிக்கவும், கிராம மக்கள் ஒன்று திரண்டனர்!
பிரகலதா
பறையோசை அங்கிருந்தோரின் நாடி, நரம்பு வழியே மூளைக்கு புது மின்சாரம் பாய்ச்சியது போல் இருந்தது. வித்தியாசமாக வாக்கு திரட்டி வரும் பிரகலதாவுக்கு மக்களின் ஆதரவு கிடைத்து வரவே செய்கிறது