“ஓபிஎஸ் நிகழ்ச்சியில இப்படியா சொதப்புவீங்க..” பிரியாணியை அடித்துப் பிடித்து அள்ளிச் சென்ற மக்கள்!
விழுப்புரம்: செஞ்சி அருகே அ.தி.மு.க ஒருங்கினைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கலந்துகொண்ட பெட்ரோல் பங்க் திறப்பு விழா நிகழ்ச்சியில் பிரியாணி மற்றும் பொருட்களை பொதுமக்கள் அள்ளிச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
நிகழ்ச்சிக்கு முறையாக ஏற்பாடு செய்யப்படாததும், உரிய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படாததுமே இந்த தள்ளுமுள்ளு நிகழ்வுக்கு காரணம் எனக் கூறப்படுகிறது.
Recommended Video
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்ற நிகழ்வில் பொதுமக்கள் அடித்துப் பிடித்து பொருட்களை அள்ளிச்சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
5 ஆண்டுகளில் விவசாயிகள் தன்னிறைவு அடைவார்கள்! சட்டசபையில் அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் நம்பிக்கை
ஓ.பன்னீர்செல்வம்
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த செம்மேடு கிராமத்தில் அ.தி.மு.க பிரமுகர் கதிரவன் என்பவரின் பெட்ரோல் பங்க் திறப்பு விழா நடைபெற்றது. அ.தி.மு.க ஒருங்கினைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கலந்துகொண்டு இந்த பெட்ரோல் பங்க்கை திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க வைத்திருந்த கல்யாண சீர்வரிசை மற்றும் தென்னை மரக்கன்றுகளை ஒரு சிலருக்கு மட்டும் மேடையில் கொடுத்துவிட்டு ஓ.பன்னீர்செல்வம் சென்றார்.
தள்ளுமுள்ளு
இதையடுத்து உதவி பெறுவதற்காகக் காத்திருந்த பொதுமக்கள் அங்கு வைக்கப்பட்டிருந்த சீர்வரிசை பொருட்கள், தென்னை மரக் கன்றுகள் மற்றும் அரிசி ஆகியவற்றை முண்டியடித்துக்கொண்டு ஒருவருக்கு ஒருவர் போட்டி போட்டுக் கொண்டு அள்ளிச் சென்றனர்.
பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பகுதியில் போதிய பாதுகாப்பின்றி வைக்கப்பட்டிருந்ததால் பொதுமக்கள் போட்டி போட்டுக் கொண்டு பொருட்களை அள்ளிச் சென்றதாக கூறப்படுகிறது.
பிரியாணி
அதுமட்டுமின்றி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பொதுமக்களுக்கு பிரியாணி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் பிரியாணியை பொதுமக்களே தாங்களே அடித்துப் பிடித்து எடுத்துச் சென்றனர்.
மேலும் ஒரு சிலர் கல்யாண சீர்வரிசை பொருட்கள் அடங்கிய பொருளை எடுத்துச் செல்ல போட்டி போட்டு ஒருவருக்கொருவர் தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
நீண்ட நேரம் காத்திருப்பு
இந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியை அதிமுகவினர் முறையாக ஏற்பாடு செய்யப்படவில்லை எனக் கூறப்படுகிறது. ஓ.பன்னீர்செல்வம் அங்கிருந்து சென்றதால் பயனாளிகள் தங்களுக்கு நலத்திட்ட உதவிகள் கிடைக்குமா என்ற சந்தேகத்திலேயே போட்டி போட்டு அள்ளிச் சென்றுள்ளனர். நிகழ்ச்சிக்கு முறையாக ஏற்பாடு செய்யப்படாததால் மக்கள் தள்ளு முள்ளு செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.