தைலாபுரத்தில் ராமதாஸின் 60வது திருமண விழா.. ஆஜரான மகள்கள், பேரன், பேத்தி! மிஸ்ஸான அன்புமணி, செளமியா!
விழுப்புரம்: பாமக நிறுவனர் ராமதாஸ் அவரது மனைவி சரஸ்வதி இருவரும் 60வது திருமண நாளை நேற்று தைலாபுரத் தோட்டத்தில் கொண்டாடினர். இதனையொட்டி அவரிடம் வாழ்த்து, ஆசி பெறுவதற்காக அவரது மகள்கள் வந்த நிலையில், அன்புமணி மற்றும் செளமியா ஆகியோர் மிஸ்ஸாகி இருக்கின்றனர். இது பாமகவில் பேசுபொருளாகி இருக்கிறது.
பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையில் உச்சக்கட்ட மோதல் நடந்து வருகிறது. ராமதாஸ் தனது பேரன் முகுந்தனுக்கு பதவி கொடுக்க வேண்டும் என்று நினைத்த போதே, மகன் அன்புமணி எதிர்ப்பு தெரிவித்தார். அப்போது தொடங்கிய முதல், தற்போது உச்சத்தில் இருக்கிறது. இதனால் பாமக தலைவர் பதவியில் இருந்து ராமதாஸை நீக்கிவிட்டு, தானே அந்த பதவியை எடுத்து கொண்டார்.

ராமதாஸ் vs அன்புமணி
2026 சட்டமன்றத் தேர்தலுக்கு பின் பாமக தலைவர் பதவி அன்புமணிக்கு வழங்கப்படும் என்று கூறி வந்த ராமதாஸ், திடீரென என் கடைசி மூச்சு இருக்கும் வரை தலைவர் பதவியை கொடுக்க மாட்டேன் என்று ஆவேசமாக கூறி இருக்கிறார். அன்புமணியும் அதற்கேற்ப நிர்வாகிகளை நீக்குவது, நடைபயணம் செல்வது, சீனியர்களை பொதுக்குழுவில் வைத்து கலாய்ப்பது என்று பதிலடி கொடுத்து வந்தார்.
செளமியா மீது விமர்சனம்
அதேபோல் ராமதாஸிடம் மன்னிப்பும் கேட்டிருக்கிறார். அதேபோல் அன்புமணியின் மனைவி செளமியா மீது ராமதாஸ் சரமாரியான குற்றச்சாட்டுகளை முன் வைத்திருந்தார். அவர் பாமகவில் தலையிடுவதையும், தேர்தலில் போட்டியிடுவதையும் ராமதாஸ் விரும்பவில்லை. இந்த விவகாரமும் பாமகவில் விவாதத்தை ஏற்படுத்தி இருந்தது.
60வது திருமண நாள்
தற்போது பாமகவில் அமைதியான சூழலில் நிலவி வரும் நிலையில், அடுத்ததாக கூட்டணி பேச்சுவார்த்தைகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அவரது மனைவி சரஸ்வதி இருவரும் தங்களின் 60வது திருமண நாளினை கொண்டாடி இருக்கின்றனர்.
தைலாபுரம் வந்த மகள்கள்
இவர்களிடம் வாழ்த்து கூறி ஆசீர்வாதம் பெறுவதற்காக ராமதாஸின் மகள்களான காந்திமதி மற்றும் கவிதா ஆகியோர் வந்துள்ளனர். அதேபோல் அவர்களின் மகன்கள், மகள்களையும் அழைத்து வந்துள்ளனர். இதனை மொத்தமாக ஒரு புகைப்படமாக எடுத்து வெளியிட்டுள்ளனர். ஆனால் ராமதாஸின் 60வது திருமண விழாவில் அன்புமணி - செளமியா குடும்பத்தினர் பங்கேற்கவில்லை.
மிஸ்ஸான அன்புமணி
இதனால் ராமதாஸ் மற்றும் அன்புமணி, செளமியா இடையிலான மோதல் இன்னும் முடிவுக்கு வரவில்லை என்று பார்க்கப்படுகிறது. அடுத்த மாதம் ராமதாஸ் பிறந்தநாளையொட்டி அன்புமணி உரிமை மீட்பு பயணம் மேற்கொள்ள இருக்கிறார். அதற்காகவாது ராமதாஸை அன்புமணி நேரில் சந்தித்து பேசுவாரா என்ற கேள்வி அக்கட்சியினர் மத்தியில் எழுந்துள்ளது.
-
மாப்ள சிவசங்கர் தான்.. ஆனால் சட்டை செந்தில் பாலாஜியோடது! திமுகவின் போலி கூப்பன்! அன்புமணி அட்டாக்! -
நானும் டெல்டா காரன் தான்.. ஸ்டாலின் சொன்னதில் இதுதான் பெரிய காமெடி! அட்டாக் மோடில் அன்புமணி ராமதாஸ் -
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு












Click it and Unblock the Notifications