கள்ளக்குறிச்சி கிழக்கு மாவட்ட பாமக கூண்டோடு கலைப்பு! சாட்டையை சுழற்றிய ராமதாஸ்! நிர்வாகிகள் ஷாக்!
விழுப்புரம்: கள்ளக்குறிச்சி கிழக்கு மாவட்ட பாமக அமைப்பை கூண்டோடு கலைப்பதாக அறிவித்துள்ளார் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ்.
நேற்று வன்னிய சங்கத்திலிருந்தும், பாமகவிலிருந்தும் மாநில நிர்வாகியான ரவிராஜ் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்பட்ட நிலையில் இன்று இந்த அதிரடியை அரங்கேற்றியுள்ளார் ராமதாஸ்.

இதனால் அடுத்து என்ன நடக்குமோ கட்சித் தலைமையின் கோபம் நம் மீது திரும்பிவிடுமோ என பாமக முக்கிய நிர்வாகிகள் பலரும் பதற்றத்தில் உள்ளனர்.
கள்ளக்குறிச்சி கிழக்கு மாவட்ட பாமக அமைப்பு கலைப்பு பற்றி ராமதாஸ் விடுத்துள்ள அறிவிப்பு வருமாறு;
''கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்குட்பட்ட உளுந்தூர்பேட்டை, ரிஷிவந்தியம் ஆகிய சட்டப்பேரவை தொகுதிகளை உள்ளடக்கிய கள்ளக்குறிச்சி கிழக்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் செயலாளர் தலைவர் உள்ளிட்ட அனைத்து நிலை பொறுப்பாளர்களும் அவர்கள் வகித்து பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகின்றனர். கள்ளக்குறிச்சி கிழக்கு மாவட்ட கட்சி அமைப்பு கலைக்கப்படுகிறது.''
''கள்ளக்குறிச்சி கிழக்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சிக்கு புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுக்க கட்சியின் மாநில அமைப்புக்குழு செயலாளர் தருமபுரி ப.சண்முகம் தலைமையில் குழு அமைக்கப்படுகிறது.''












Click it and Unblock the Notifications