ஆயுதப்படை காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை.. விழுப்புரம் பரபரப்பு.. போலீசார் விசாரணை!
விழுப்புரத்தில் ஆயுதப்படை காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
விழுப்புரம்: விழுப்புரத்தில் ஆயுதப்படை காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் சமீப நாட்களாக போலீசார் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. பணி அழுத்தம் மற்றும் குடும்ப பிரச்சனைகள் காரணமாக போலீசார் தற்கொலை செய்து கொள்கிறார்கள்.

இந்த நிலையில் விழுப்புரத்தில் ஆயுதப்படை காவலர் ஏழுமலை துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் போலீசார் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியள்ளது. ஆயுதப்படை காவலர் ஏழுமலை தற்கொலையை தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
விழுப்புரம் காகுப்பம் ஆயுதப்படை வளாகத்தில் உள்ள, காவலர் குடியிருப்பில் ஏழுமலை தற்கொலை செய்து கொண்டார். ஆயுதப்படை இரண்டாம் நிலை காவலர் பணியில் ஏழுமலை பணியாற்றி வந்தார். இவரின் தற்கொலைக்கு காரணம் தெரியவில்லை.
ஏழுமலை மரணம் குறித்து விழுப்புரம் காவல் கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் நேரில் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications