பேரம் பேசியதில் தகராறு.. இளைஞர்களை வெளுத்துக் கட்டிய திருநங்கைகள்.. விழுப்புரத்தில் பகீர் சம்பவம்
விழுப்புரம்: விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் இரவு நேரத்தில் மூன்று திருநங்கைகள் ஒன்று சேர்ந்து இரண்டு இளைஞர்களைத் தாக்கும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. பேரம் பேசியதில் வாய்த் தகராறு ஏற்பட்டுள்ளதையடுத்து, திருநங்கைகள் இளைஞர்களை வெளுத்துக் கட்டிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.
விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் இரவு நேரங்களில் நடமாடும் திருநங்கைகள் பயணிகளுக்குத் தொந்தரவு தருவதாகவும், தவறான செயல்களில் ஈடுபடுவதாகவும் தொடர் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு வருகின்றன. குறிப்பாக திருச்சி, கோயம்புத்தூர் மதுரை போன்ற இடங்களிலிருந்து வரும் பயணிகளிடம் திருநங்கைகள் அத்துமீறுவதும், சிலர் திருநங்கைகளிடம் சமூக விரோத செயல்களில் ஈடுபடுவதும் வாடிக்கையாகி இருந்து வருகிறது.

திருநங்களைகள் கூறும் ஆசை வார்த்தைகளை நம்பி அவர்களுடன் செல்பவர்களிடம் பணம் மற்றும் செல்போன்கள் பறிப்புப் சம்பவங்கள் நிகழ்கின்றன. வெளியில் சொன்னால் அவமானம் என எண்ணி சிலர் போலீஸில் புகார் தெரிவிக்காமல் செல்கின்றனர். இதனை சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளும் திருநங்கைகள் தொடர்ந்து விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் நடமாடி வருவதோடு பல்வேறு குற்றச் சம்பவங்களிலும் ஈடுபட்டு வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
இச்சம்பவங்கள் குறித்து காவல் துறையில் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்தால் ஓரிரு நாட்கள் மட்டும் அமைதியாக இருந்துவிட்டு மீண்டும் இதுபோன்ற வேலைகளில் ஈடுபட்டு பயணிகளைத துன்புறுத்தி வருகின்றனர். இந்நிலையில், விழுப்புரத்தில் மூன்று திருநங்கைகள் சேர்ந்து இளைஞர்களை வெளுத்துக் கட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதுதொடர்பாக, விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள கடை ஒன்றில் இருக்கும் சிசிடிவி காட்சியில், இரண்டு இளைஞர்கள் நடந்து செல்கின்றனர். அங்கு நடந்து செல்லும் திருநங்கையை அழைத்து பேரம் பேசுகின்றனர். அப்போது, அவர்களுக்கிடையே வாய்த் தகராறு ஏற்படுகிறது. இதைத்தொடர்ந்து, அந்த இரண்டு இளைஞர்களையும் பிடித்து, மூன்று திருநங்கைகள் தாக்குகின்றனர். அப்போது அருகில் உள்ள கடையில் இருந்த கட்டையை எடுத்து அடிக்கச் செல்லும் காட்சிகளும் பதிவாகியுள்ளன. இந்த வீடியோ காட்சி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் பேருந்து நிலையத்தில் நாளுக்கு நாள் திருநங்களைகளின் அட்டூழியம் அதிகரித்து வருவதால் இதுதொடர்பாக காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும், பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications