"என் அப்பன் எங்கே".. வெந்து போன உடலுடன் கதறிய ஜெயஸ்ரீ.. மனதை உலுக்கும் விழுப்புரம் பயங்கரம்
விழுப்புரம்: "அந்த கவுன்சிலர் முருகனும் யாசகனும் என் மேல பெட்ரோல் ஊத்தி கொளுத்திட்டாங்க.. என் அப்பன் எங்கே?" என்று 15 வயது சிறுமி கேட்டு அழும் வீடியோ வெளியாகி, தமிழக மக்களை நிலைகுலைய வைத்து வருகிறது!!
Recommended Video
விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூரை அடுத்திருக்கும் சிறுமதுரை காலனியை சேர்ந்த தம்பதி ஜெயபால் - ராஜி.. இவர்களுக்கு 2 ஆண், 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.. இதில் மூத்த மகள்தான் ஜெயஸ்ரீ.. 10-ம் வகுப்பு படித்து வந்தார்.. 15 வயதாகிறது.
விவசாயி கூலி செய்து வரும் ஜெயபால், வீட்டிலேயே ஒரு சிறிய பெட்டிக்கடையும் நடத்தி வருகிறார். நேற்று தம்பதி இருவரும் வெளியே சென்றுவிட்ட நிலையில் ஜெயஸ்ரீ மட்டும் வீட்டில் இருந்தார்.

ஜெயபால்
காலை 11 மணி இருக்கும்.. திடீரென வீட்டிற்குள் இருந்து புகை வருவதை கண்டு அக்கம்பக்கத்தினர் அலறி அடித்து கொண்டு ஜெயபால் வீட்டிற்குள் சென்றனர்.. அங்கே ஜெயஸ்ரீ நெருப்பில் வெந்து கொண்டிருந்தார்.. உடம்பெல்லாம் தீ பற்றி எரிய அலறி துடித்தார்.. அதை பார்த்து பதறிய அவர்கள் ஆம்புலன்ஸை வரவழைத்து உடனடியாக முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர்.

விசாரணை
அப்போதே ஜெயஸ்ரீக்கு 95 சதவீதம் தீக்காயம் ஏற்பட்டுவிட்டது.. தீவிர சிகிச்சையும் நடந்தது.. அதற்குள் தகவலறிந்து விழுப்புரம் மாவட்ட எஸ்பி உள்ளிட்ட அதிகாரிகள் ஆஸ்பத்திரிக்கு விரைந்து வந்தனர்.. ஜெயஸ்ரீயிடம் நேரிலேயே விசாரணையும் நடத்தினர். அவர்களிடம் ஜெயஸ்ரீ அளித்த வாக்குமூலத்தில் "அந்த கவுன்சிலர் முருகனும் யாசகனும் (கலியபெருமாள்) என் மேல பெட்ரோல் ஊத்தி கொளுத்திட்டாங்க.. என் அப்பன் எங்கே? என்று அழுதார்.

வாக்குமூலம்
இந்த சம்பவம் முன்விரோதம் காரணமாகவே நடந்துள்ளது.. முருகனும், கலியபெருமாளும் வீட்டிற்குள் நுழைந்து, ஜெயஸ்ரீயின் கை, காலை கட்டிப்போட்டுவிட்டு, வாயில் துணியையும் அழுத்திவிட்டு கெட்ட வார்த்தைகளில் திட்டி உள்ளனர்.. அதன்பிறகு 2 பேரும் சேர்ந்து அடித்து உதைத்துள்ளனர்.. இறுதியாகதான் அங்கிருந்த பெட்ரோலை எடுத்து ஜெயஸ்ரீ மீது ஊற்றி தீ வைத்துவிட்டு, கடைசியில் வீட்டையும் வெளிப்பக்கமாகவும் பூட்டிவிட்டு சென்றுள்ளனர் என்கிறார்கள்.

அதிர்ச்சி
ஜெயஸ்ரீயின் இந்த வாக்குமூலம் வீடியோவாகவும் எடுக்கப்பட்டது.. அப்போது கண்களை கூட ஜெயஸ்ரீயால் திறக்க முடியவில்லை.. முகமெல்லாம் வெந்து காணப்பட்டது.. முழுதுமாக கருகி உள்ளது.. வாக்குமூல வரிகளையே கஷ்டப்பட்டுதான் சொன்னார்.. இந்த உருக்கமான காட்சி சோஷியல் மீடியாவிலும் பரவி மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியதுடன், பதற வைத்தும் வருகிறது.

அப்பன் எங்கே
வாக்குமூலத்தின் அடிப்படையில் முருகனையும், கலியபெருமாளையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வந்தாலும், ஜெயஸ்ரீ கேட்ட கடைசி கேள்வி இன்னமும் ஒலித்து கொண்டே... மனதை துளைத்தெடுத்தும் வருகிறது "என் அப்பன் எங்கே?"
-
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications