காருக்குள்ளே யாரு? நடுரோட்டில் தீப்பற்றி எரிந்த போலீஸ் SP கார்! விழுப்புரத்தில் அதிர்ச்சி!
விழுப்புரம் மாவட்ட எஸ்பியின் கார் நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்து கருகியது
விழுப்புரம்: இரவு நேரத்தில் எஸ்.பி-யின் கார் தீப்பிடித்து எரிந்ததால், அந்த காரை ஓட்டி வந்த நபர் யார் என்று தெரியாமல் விழுப்புரம் போலீசார் குழப்பத்தில் உள்ளனர்.
விழுப்புரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக ஸ்ரீ நாதா பணியாற்றி வருகிறார்.. இவருக்கு 2 வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் நேற்றிரவு விழுப்புரம்- சென்னை புறவழிச்சாலையில் முத்தம் பாளையம் என்ற இடத்தில் இவரது கார் ஒன்று தீப்பிடித்து எரிந்ததாக விழுப்புரம் தாலுகா போலீசாருக்கு தகவல் கிடைத்தது..

விழுப்புரம்
இதனால் விழுப்புரம் தாலுகா போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் வீரர்கள் சம்பவ இடத்திற்கு நேரில் விரைந்தனர்.. ஆனால், அதற்குள் அந்த கார் கொழுந்து விட்டு எரிந்து, சாம்பலாகி கருகிவிட்டது.. எனவே, அந்த வாகனத்தின் மீது தீயணைப்புத் துறையினர் தண்ணீரை பீச்சி அடித்து, தீயை அணைத்தனர்... பிறகு காருக்குள் சென்று பார்த்தபோது அதனுள் யாரும் இல்லாதது தெரியவந்தது.

கார்
எனவே, இந்த காரை ஓட்டி வந்த நபர் யார்? நடுரோட்டில் கார் எப்படி தீப்பற்றியது? என்று பல்வேறு கோணத்தில் தாலுக்கா போலீசார் விசாரணையை துவங்கினர்.. அப்போதுதான், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரின் கார் திடீரென ரிப்பேர் ஆகிவிடவும், இன்னொரு கார் கூடுதலாக பயன்படுத்தப்பட்டுள்ளது விசாரணையில் தெரியவந்தது.. விழுப்புரம் ஆயுதப்படை போலீஸ்காரர் தியாகராஜன்.. இவர்தான் மாவட்ட எஸ்பியின் கார் டிரைவராக உள்ளார். ஆனால், மணிகண்டன் என்ற மற்றொரு டிரைவர் நேற்றிரவு காரை ஓட்டி வந்துள்ளார்..

தியாகராஜன்
விழுப்புரம்-சென்னை புறவழிச்சாலை செஞ்சி ரோடு கூட்ரோட்டில் வந்தபோது, கார் இன்ஜினில் திடீரென புகை வந்துள்ளது.. அப்போது அவர்கள் காரில் இருந்து இறங்கிவிட்ட நிலையில்தான், கார் தீப்பிடித்து எரிய ஆரம்பித்துள்ளது.. எஸ்பி அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரை கஞ்சனூருக்கு தியாகராஜன்தான் எடுத்து சென்றார் என்பது தெரியவந்துள்ளது. தியாகராஜனுக்கு பதிலாக மணிகண்டன் என்பவர் இந்த காரை ஓட்டி வந்ததாக கிடைத்த தகவலின் அடிப்படையில் அவரிடம் போலீசார் விசாரணை செய்து வருவதாக கூறப்படுகிறது.

குழப்பம்
ஆனால் மாவட்ட எஸ்பியின் வாகனத்தை ஓட்டி வந்த நபர் யார் என்று முழுமையான தகவல் கிடைக்காமல் காவல்துறை வட்டாரங்களில் சற்று குழப்பத்தில் உள்ளனர்.. காவல்துறை உயர் அதிகாரி காரின் எடுத்து பயன்படுத்த காரணம் என்ன? என்பது தெரியாமல் காவல்துறையை சேர்ந்த பலர் குழப்பத்தில் இருந்து வருகின்றனர். நேற்றிரவு கார் தீப்பிடித்து எரிந்ததில், திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரத்துக்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது குறிப்பிடத்தக்து.












Click it and Unblock the Notifications