இரட்டை இலை இல்லை.. ஆனால் மாம்பழம் இருக்கிறது.. ஓபிஎஸ் பேச்சு.. சட்டென திரும்பிப் பார்த்த அண்ணாமலை!
விழுப்புரம்: விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் ஓபிஎஸ், டிடிவி தினகரன், அண்ணாமலை உள்ளிட்டோர் ஒரே மேடையில் பிரச்சாரம் செய்தனர். நம்மிடம் இரட்டை இலை இல்லை என்றாலும் இரட்டை இலையுடன் கூடிய மாங்கனி இருக்கிறது எனப் பேசி உள்ளார் ஓ.பன்னீர்செல்வம்.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதியில் கடந்த 2021ல் நடந்த சட்டசபை தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் புகழேந்தி. இவர் கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி உடல்நலக் குறைவால் காலமானார். இவர் மறைந்ததைத் தொடர்ந்து விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கு ஜூலை 10 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

இந்த இடைத்தேர்தலில் திமுக சார்பில் அன்னியூர் சிவா, பாஜக கூட்டணியில் உள்ள பாமக சார்பில் அக்கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சி சார்பில் அபிநயா ஆகியோர் போட்டியில் உள்ளனர். அதிமுக, தேமுதிக ஆகிய இருகட்சிகளும் இந்த இடைத்தேர்தலைப் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன.
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் ஜூலை 10ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில், பாமக வேட்பாளருக்கு ஆதரவாக, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம்ஆகிய மூவரும் ஒரே மேடையில் பிரச்சாரம் செய்தனர்.
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் என்டிஏ கூட்டணி சார்பில் போட்டியிடும் பாமக வேட்பாளர் அன்புமணியை ஆதரித்து பிரசாரம் செய்ய நடந்த பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பாமக வேட்பாளர் அன்புமணியை ஆதரித்து அன்புமணி ராமதாஸ், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, ஜி.கே.வாசன், பாரிவேந்தர், தேவநாதன், ஓபிஎஸ், டிடிவி தினகரன், ஜான் பாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுத் தலைவரும், தமிழக முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் பேசுகையில், "நம்மிடம் இரட்டை இலை சின்னம் இல்லை என்றாலும் இரட்டை இலையுடன் கூடிய மாங்கனி சின்னம் நம்மிடம் இருக்கிறது. அனைத்து நிலையிலும் திமுக அரசு தோல்வி அடைந்துள்ளது. தமிழகத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. கள்ளச்சாராயம், போதைப்பொருள் நிறைந்த ஆட்சியாக உள்ளது" எனத் தெரிவித்தார்.
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பேசுகையில், "நானும், ஒ. பன்னீர்செல்வமும் இந்த கூட்டணியில் இருக்கிறோம். எனவே முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் படத்தைப் பயன்படுத்த பாமகவிற்கு அனைத்து உரிமையும் இருக்கிறது" எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேச வந்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, "இங்கே முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோர் ஜெயலலிதாவின் சாட்சியாக அமர்ந்திருக்கிறார்கள். எம்ஜிஆருக்கு எப்படி திண்டுக்கல் மந்திரச் சொல்லாக மாறியதோ அப்படி என்.டி.ஏ கூட்டணிக்கு விக்கிரவாண்டி இடைத்தேர்தல் மந்திரச்சொல்லாக மாறும். அதிமுக தொண்டர்கள் மாம்பழம் சின்னத்திற்குத்தான் வாக்களிப்பார்கள்" எனப் பேசினார்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications