Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கள்ளக்குறிச்சி கொழுந்தியாள் தந்த புகார்.. முன்னாள் ஊராட்சி தலைவர் நைனா இருந்த கோலம்.. என்ன நடந்தது?

Subscribe to Oneindia Tamil

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் அத்திப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த நைனா என்பவர் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவராக இருந்தார். நைனா மீது அவரது கொழுந்தியாள் மானபங்கம் செய்ததாக புகார் அளித்தார். இந்த புகாரில் போலீஸ் விசாரணைக்காக சென்று வந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் நைனா எடுத்த முடிவு உறவினர்களை ஆடிப்போக வைத்துள்ளது. இது தொடர்பாக இன்ஸ்பெக்டர் உள்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் அத்திப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரான 65 வயதாகும் நைனா என்பவர் வசித்து வந்தார். அவரது தம்பி பன்னீர்செல்வம். இவரது மனைவி சரிதாவுக்கு 45 வயது ஆகிறது. நைனாவிற்கும் பன்னீர்செல்வத்திற்கும் இடையே நிலப்பிரச்சினை இருந்து வருகிறது.

What is the letter written by former panchayat president Naina in Kallakurichi

கடந்த சில நாட்களுக்கு முன்பு தன்னை தாக்கி, மானபங்கம் செய்து கொலை மிரட்டல் விடுத்ததாக நைனா மீது திருநாவலூர் போலீஸ் நிலையத்தில் அவரது கொழுந்தியாள் சரிதா புகார் அளித்தார். அதன்பேரில் நேற்று முன்தினம் நைனாவை போலீஸ் நிலையத்துக்கு வரவழைத்து விசாரணை நடத்தினர். இதனால் மன உளைச்சலில் இருந்த நைனா நேற்று அதிகாலை தனது நிலத்தில் உள்ள மோட்டார் கொட்டகையில் வாழ்க்கையை முடித்துக் கொண்டார்.

நைனா வாழ்க்கையை முடித்துக் கொள்வதற்கு முன்பு எழுதி வைத்திருந்த 3 பக்க கடிதம் சிக்கியது. அந்த கடிதத்தில் அவர் கூறுகையில், எனது பாட்டி எனக்கு கொடுத்த நிலத்தில் சரிதா பங்கு கேட்டார். இது தொடர்பாக கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் எனக்கு சாதகமாக தீர்ப்பு வந்தது.

எனவே என்னை பழிவாங்கும் நோக்கத்தில் தகாத சில நபர்களுடன் சேர்ந்து சரிதாவை நான் மானபங்கம் படுத்தியதாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீஸ் துணையுடன் என்னை வீட்டை காலி செய்யுமாறு மிரட்டுகின்றனர். விசாரணைக்காக போலீஸ் நிலையத்துக்கு சென்றால் அங்கு கட்டப்பஞ்சாயத்து செய்கிறார்கள். இதற்கு போலீ்ஸ் இன்ஸ்பெக்டரும் உடந்தையாக இருக்கிறார்.

நான் சொல்வது எல்லாம் உண்மை. தவறாக வேறு ஒன்றும் கூறவில்லை. இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. இந்த கடிதத்தை போலீசார் கைப்பற்றி தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இதனிடையே நைனா எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ள அனைவரையும் கைது செய்ய வேண்டும் எனவும், அதுவரையில் அவரது உடலை வாங்க மாட்டோம் என்று கூறி அவரது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே நைனாவின் மனைவி பழனியம்மாள் கொடுத்த புகாரின்பேரில் திருநாவலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் இளையராஜா, சரிதா உள்பட 7 பேர் மீது தற்கொலைக்கு தூண்டியதாக திருநாவலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் கள்ளக்குறிச்சி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தற்கொலை எந்த பிரச்சனைக்கும் தீர்வு அல்ல.. உங்களுக்கு மன அழுத்தம் உண்டானாலோ அல்லது தற்கொலை எண்ணம் எழுந்தாலோ, கீழ்கண்ட எண்களை தொடர்பு கொள்ளலாம்:

சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 2464 0050 (24 மணி நேரம்)

மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணி நேரம்)

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+