Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆபாசம்.. செல்போனுக்கு வந்த பெண்ணின் 'நிர்வாண போட்டோ'.. உற்று பார்த்து அதிர்ந்து நின்ற நபர்.. என்னாச்சு

பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாக மார்ப்பிங் செய்து வெளியிட்ட இளைஞர் செய்து செய்யப்பட்டுள்ளார்.

Subscribe to Oneindia Tamil

விழுப்புரம்: திருமணம் மீறிய உறவுக்கு மறுத்த பெண்ணின் புகைப்படத்தை நிர்வாணமாக மார்பிங் செய்து போன் நம்பருடன் பேஸ்புக்கில் பதிவிட்ட இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை சேர்ந்தவர் ராதா(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கு திருமணமாகி 19 ஆண்டுகள் ஆகும் நிலையில், 16 மற்றும் 18 வயதில் இரண்டு மகன்களுடன் வசித்து வருகிறார். இவரது கணவர் வேலைக்காக வெளிநாட்டிற்கு சென்றிருக்கிறார். இந்நிலையில் சமீபத்தில் அவர் ஊர் திரும்பிய நிலையில், தனது மனைவியின் நிர்வாண படம் செல்போன் நம்பருடன் பேஸ்புக்கில் வந்திருப்பது கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

 Youth arrested for posting obscene photo of woman

இதனையடுத்து மனைவியிடம் விசாரிக்கையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்துள்ளன. அதாவது இவர் வெளிநாட்டுக்கு சென்றிருந்த நேரத்தில் இவரது மனைவிக்கும் அதே பகுதியை சேர்ந்த முபாரக் என்பவருக்கும் இடையே நட்பு ஏற்பட்டிருக்கிறது. இந்த நட்பு நாளடைவில் காதலாக மாறியிருக்கிறது. இருவரும் தனிமையில் அடிக்கடி சந்தித்து வந்துள்ளனர். இப்படி இருக்கும்போதுதான் ராதாவின் கணவர் வெளிநாட்டில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார்.

இதனால் ராதா முபாரக்கை தவிர்த்து வந்துள்ளார். ஆனால் முபாரக், தன்னை காதலிக்க வேண்டும் என்றும் தன்னுடன் சேர்ந்து வாழ வேண்டும் என்றும் ராதவை வலியுறுத்தியுள்ளார். இதற்கு ராதா மறுப்பு தெரிவித்த நிலையில் முபாரக் ராதாவின் புகைப்படத்தை நிர்வாணமாக மார்ப்பிங் செய்து அவருடை செல்போன் எண்ணையும் இணைத்து பேஸ்புக்கில் பதிவேற்றியுள்ளார். இதனால் ராதாவுக்கு நேற்று முழுவதும் அடையாளம் தெரியாத நபர்களிடமிருந்து அழைப்பு வந்திருக்கிறது. மேலும், போனில் தொடர்புகொண்டு பேசியவர் ஆபாசமாக பேசியதோடு, வாட்ஸ்அப்பிலும் ஆபாசமாக மெஸேஜ் அனுப்பியுள்ளனர்.

இந்த செல்போன் அழைப்புகளால் என்ன செய்வது என்று தெரியாமல் விழித்துக் கொண்டு இருக்கையில் தான் அவரது கணவரும் பேஸ்புக் பதிவை பார்த்து கேள்வியெழுப்பியுள்ளார். எல்லா பக்கமும் நெருக்கடி எழுந்த நிலையில் ராதாவுக்கும் அவருடைய கணவருக்கும் சண்டை எழுந்திருக்கிறது. அக்கம் பக்கத்தினர் பார்த்து இந்த சண்டையை தடுத்து நிறுத்தியுள்ளனர். இந்நிலையில் இப்பிரச்னைக்கு காரணம் முபாரக்தான் என்பதை அறிந்து கொண்ட ராதா அவரிடம் நியாயம் கேட்டிருக்கிறார்.

முபாரக், ராதாவை கடுமையான சொற்களால் திட்டி தன்னுடன் சேர்ந்து வாழ வராவிட்டால் இதைவிட அதிகமாக செய்வேன் என்று கூறியுள்ளார். இதனையடுத்து ராதா செஞ்சி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வந்த காவல்துறையினர் நேற்று இரவு முபாரக்கை கைது செய்துள்ளனர். பெண்கள் மீதான தொடர் தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் இந்த குற்றங்கள் மீது உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவல்துறையினரை மகளிர் அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+