ஆடு 25.. விருதுநகரை வெலவெலக்க வைத்த சம்பவம்.. "கிடை" போட முடியாமல் குமுறும் விவசாயிகள்.. என்னாச்சு
விருதுநகர்: ஆங்காங்கே ஆடுகள் அநியாயமாக இறந்துவருவது, கால்நடை விவசாயிகளை உருக்குலைய வைத்து வருகிறது. என்ன நடக்கிறது?
சிவகங்கையை சேர்ந்தவர் நாகராஜ் என்பவர், ஆடுகளை வளர்த்து வருகிறார். ஒவ்வொரு வருடமும், டெல்டாவில் அறுவடை முடிந்ததுமே, தன்னுடைய ஆடுகளை அங்கு கொண்டு சென்று, மேய்ச்சலுக்கு விடுவது வழக்கமாம்.

கால்நடைகள்: இவரை போலவே, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டத்தில் உள்ளவர்களும், தங்கள் கால்நடைகளை டெல்டா பகுதிக்கு அழைத்து சென்று ஆடுகளை மேய்க்க விடுவார்கள்..
அடுத்த சாகுபடி டெல்டாவில் ஆரம்பிக்கும்வரை, அங்கேயே தங்கியிருந்து இந்த ஆடுகளை இவர்களை மேய்த்து வருவார்கள்.. காரணம், கோடை காலங்களில் அறுவடை முடிந்து வயல்களில் இயற்கை உரத்தின் தேவைக்காக ஆடுகளை கிடை போடுவது வழக்கம்.. இதனால் ஆடுகள் போடும் கழிவுகள், வயல்களில் உரமாக படிந்து, சாகுபடி நேரத்தில் விளைச்சல் அதிகமாக இருக்குமாம்..
செம்மறி ஆடுகள்: இதற்காகவே, வெளி மாவட்டங்களில் இருந்து, நிறைய செம்மறி ஆடுகள் வரவழைக்கப்பட்டு, விவசாயிகள் தங்களுடைய வயல்களில் ஆடுகளை கிடை போட வைப்பார்கள். அப்படித்தான், இந்த வருடமும், நாகராஜ் தனக்கு சொந்தமான 200 செம்மறி ஆடுகளை, ஒரு லாரியில் ஏற்றிக்கொண்டு மேய்ச்சலுக்காக நாகப்பட்டினம் மாவட்டத்துக்கு கிளம்பினார்..
கீழ்வேளூர் வட்டம் மணலூர் கிராமத்துக்கு நேற்றுமுன்தினம், லாரியில் 200 செம்மறி ஆடுகளை ஏற்றிக் கொண்டு கிளம்பினார். ஆனால், மணலூர் மேலக்கரை சாலை பகுதியில் லாரி வந்துகொண்டிருந்தபோது, மண்சாலையில், லாரி நிலைதடுமாறியது. அருகிலிருந்த வயலில் லாரி குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி, அதிலிருந்த அனைத்து ஆடுகளுக்கும் லாரிகளுக்கும், வயலுக்கும் நடுவில் சிக்கி கொண்டன.
ஆடுகள்: அங்கிருந்தவர்கள் ஓடிவந்து ஆடுகளை மீட்டாலும், 75-க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகள் அங்கேயே உடல் நசுங்கி இறந்துவிட்டன.. பலியான ஆடுகளின் மதிப்பு ரூ.10 லட்சம் ஆகும்.
அதேபோல, தாழையூத்து தென்கலத்தை சேர்ந்தவர் முத்துக்குமார்.. இவரும் ஆடுகளை வளர்த்து வருகிறார். 2 நாட்களுக்கு முன்பு மேய்ச்சலுக்காக ஆடுகளை அனுப்பியபோது, திடீரென வாகனம் ஒன்று வேகமாக மோதியதில், மேய்ச்சலிலிருந்த 5 ஆடுகளுமே சம்பவ இடத்தில் இறந்துவிட்டன.
மேய்ச்சல்: நேற்றும் இதுபோலவே ஒரு துயரம் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் நடந்துள்ளது. புளியம்பட்டி காட்டுப்பகுதியில் முதுகுளத்தூரை சேர்ந்த ராஜநல்ல கருங்கன் என்பவர், கிடை அமைத்து அதில் ஆடுகளை வளர்த்து வந்துள்ளார். 20 ஆட்டுக்குட்டிகளை மட்டும் கிடையில் விட்டுவிட்டு மற்றவற்றை மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
ஆனால், சாயங்காலம் வந்து பார்த்தபோது, கிடை முழுவதுமே எரிந்த நிலையில் ஆட்டுக்குட்டிகள் தீயில் கருகி கிடந்தன.. உடனடியாக போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்ற ராஜநல்ல கருங்கன், மர்மநபர்கள் தன்னுடைய கிடையில் தீ வைத்ததாக புகார் தந்துள்ளார். கடந்த 2 நாட்களில் மட்டுமே நூற்றுக்கணக்கான ஆடுகள் இறந்துள்ளதும், கருகியிருப்பதும், விவசாயிகளை நிலைகுலைய வைத்துவருகிறது.
கலக்கம்: இது தொடர்பான விசாரணையில் போலீசார் இறங்கியிருக்கிறார்கள் என்றாலும், உயிரிழந்த ஆடுகளின் சடலங்களை பார்த்து, அந்தந்த ஆடு உரிமையாளர்கள் கதறி கதறி அழுதது காண்போரை கலங்கடித்தது.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர் -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி












Click it and Unblock the Notifications