‛பற்றி எரிந்த உடல்’.. ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட் வளாகத்தில் தீக்குளித்த நபரால் பரபரப்பு.. யார் இவர்?
விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் இன்று திடீரென்று உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்த நபரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. உடலில் தீப்பற்றி எரிந்த நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றம் செயல்பட்டு வருகிறது. இன்று சனிக்கிழமை நீதிமன்றத்துக்கு விடுமுறையாகும். இதனால் நீதிமன்ற வளாகம் பரபரப்பு ஏதுமின்றி வெறிச்சோடி காணப்பட்டது.

இதற்கிடையே தான் நீதிமன்றத்தில் கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. இத்தகைய சூழலில் தான் இன்று நீதிமன்ற வளாகத்துக்கு பேக் ஒன்றுடன் ஒருவர் வந்துள்ளார். அவர் பேக்கை தனியே வைத்து கொண்டு சிறிது நேரம் அமர்ந்துள்ளார்.
இந்த வேளையில் திடீரென்று அவர் நீதிமன்ற வளாகத்தின் அருகே பெட்ரோலை எடுத்து உடலில் ஊற்றியுள்ளதோடு, தீயை பற்ற வைத்து தீக்குளித்துள்ளார். இதை அங்கு கட்டுமான பணியில் ஈடுபட்டவர்கள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக அவர்கள் ஓடிவந்து அந்த நபரின் உடலில் பிடித்த தீயை அணைத்தனர். இருப்பினும் அவரது உடலில் தீக்காயம் ஏற்பட்டு இருந்தது.
இதையடுத்து ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஸ்ரீவில்லிபுத்தூர் மருத்துவமனையில் அந்த நபர் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன்பிறகு மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இதற்கிடையே தான் சம்பவம் குறித்து அறிந்த ஸ்ரீவில்லிபுத்தூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.
அப்போது அங்கு இருந்த அவரது பேக்கை கைப்பற்றி போலீசார் சோதனையிட்டனர். அப்போது அவர் கோவில்பட்டி மந்திதோப்பு பகுதியை சேர்ந்த சந்திரசேகர் (45) என்பதும், அவர் டிரைவர் என்பதும் தெரியவந்தது. இருப்பினும் அவர் எதற்காக தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார் என்பது தெரியவில்லை. இதுபற்றி போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர்.
இதற்கிடையே தான் சந்திரசேகர் மீது ஏற்கனவே 3 வழக்குகள் போலீஸ் நிலையங்ளில் நிலுவையில் இருப்பது தெரியவந்துள்ளது. இதனால் அவரது தற்கொலை முயற்சிக்கு வழக்கு ஏதேனும் காரணமாக இருக்குமோ? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதுபற்றி போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவம் குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
-
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications