Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

”அதே ஸ்டைல்” அருப்புக்கோட்டை கோயிலுக்கு யானையை தானமாக வழங்கிய நடிகை திரிஷா!

Subscribe to Oneindia Tamil

விருதுநகர்: விலங்குகள் மீது தனி பிரியம் கொண்டுள்ள நடிகை திரிஷா, விருதுநகர் அருப்புக்கோட்டையில் உள்ள விநாயகர் கோவிலுக்கு எந்திர யானை ஒன்றை வழங்கி உள்ளார். நடிகை திரிஷா மற்றும் தன்னார்வ அமைப்பினர் இணைந்து ரூ.6 லட்சம் மதிப்பிலான எந்திர யானையை கோவிலுக்கு வழங்கி உள்ளனர். 3 மீட்டர் உயரமும், 800 கிலோ எடையிலும் நிஜயானை போன்றே பிரமாண்டமாக இந்த எந்திர யானை உள்ளது. இந்த யானைக்கு கஜா என பெயரிடப்பட்டு உள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையான திரிஷா விலங்குகள் மீது தனிப் பிரியம் கொண்டவராக உள்ளார். இவர் பீட்டா அமைப்பிலும் உள்ளார். இந்த நிலையில் நடிகை திரிஷா விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள விநாயகர் கோவிலுக்கு எந்திர யானை ஒன்றை வழங்கியுள்ளார்.

actress Trisha elephant Virudhunagar

கோவிலுக்கு யானை வழங்கிய திரிஷா

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை வீரலட்சுமி நகரில் பிரபல ஆதிசேஷ செல்வ விநாயகர் மற்றும் அஷ்டபுஜ ஆதிசேஷ வராகி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வரும் ஜூலை 2 ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற இருக்கிறது. இதற்காக கோவிலில் தினமும் பூஜைகள் நடந்து வருகின்றன.

இந்த நிலையில் நடிகை திரிஷா இந்த கோவிலுக்கு எந்திர யானை ஒன்றை வழங்கி உள்ளார். அச்சு அசலாக யானை போன்றே இந்த எந்திர யானை தோற்றமளிக்கிறது. 3 மீட்டர் உயரம் கொண்டுள்ளது. இதன் எடை 800 கிலோ ஆகும். நிஜயானையை போன்றே கம்பீரமாக தோற்றமளிக்கும் இந்த எந்திர யானைக்கு கஜா என்று பெயர் வைத்து உள்ளனர்.

ஜெயலலிதா பாணியில் திரிஷா

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவும் கோவில்களுக்கு தானமாக யானை வழங்கி வந்தார். கடந்த 2011 ஆம் ஆண்டு திருச்சி, ஸ்ரீரங்கம் ரங்கநாத சாமி கோவிலுக்கு ஜெயலலிதா தானமாக சிமித்ரா என்கிற சுமி என்ற யானையை கொடுத்து இருந்தார். தற்போது இதே பாணியில் நடிகை திரிஷாவும் யானை வழங்கி வருவதாக நெட்டிசன்கள் கூறுகிறார்கள். அதே சமயத்தில் சிலர், திரிஷா பீட்டா அமைப்பில் இருப்பதனால் எந்திரத்தால் ஆன யானையை பரிசாக வழங்கியிருப்பதாகவும் கூறி வருகின்றனர்.

அச்சு அசலாகவே யானை போன்று தன் இரண்டு பெரிய காதுகளையும் ஆட்டிக்க்கொள்கிறது. தும்பிக்கையை மேலே தூக்குவது போன்றும், அவ்வப்போது வால்களை ஆட்டிக்கொண்டும் இருக்கிறது. இதேபோல் நிஜ யானை பக்தர்களுக்கு தும்பிக்கையால் ஆசி வழங்குவது போன்றும், தண்ணீரை பீய்ச்சியும் அடிக்கிறது. நேற்று இந்த யானையை கோவிலுக்கு வழங்கினர். அப்போது கோவில் நிர்வாகிகள், ஊழியர்கள், பக்தர்கள், பொதுமக்கள் வியந்து பார்த்தனர்.

யானைகள் துன்புறத்தப்படுவதை தவிர்க்க

கோவில் நிர்வாகிகள் மற்றும் ஊழியர்கள் கூறுகையில், கோவில்களில் யானைகள் துன்புறத்தப்படுவதை தவிர்க்கவே தன்னார்வ அமைப்பு மற்றும் நடிகை திரிஷா இந்த எந்திர யானையை வழங்கியுள்ளனர் என்று தெரிவித்தனர். நடிகை திரிஷாவும், சென்னையைச் சேர்ந்த பீப்புல் ஃபார் கேட்டில் இன் இந்தியா என்ற தன்னார்வ அமைப்பினர் சேர்ந்து தான் இந்த ரூ. 6 லட்சம் மதிப்பிலான எந்திர யானையை கோவிலுக்கு வழங்கியுள்ளனர்.

தமிழகத்தில் முதல் முறையாக இதுபோன்ற எந்திர யானை கோவிலுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இதே தன்னார்வ அமைப்பு கேரளாவில் உள்ள கோவிலுக்கு வழங்கியிருந்தது. இதுபற்றி பீப்புல் ஃபார் கேட்டில் இன் இந்தியா குழுவினர் கூறியதாவது:-

எந்திரத்தால் ஆன முதல் யானை

இதுபோன்ற ஒரு எந்திர யானையை கேரளாவில் உள்ள கோவிலுக்கு கடந்த 2023 ஆம் ஆண்டு வழங்கினோம். இந்த யானைக்கு இரிஞ்சாடப்பில்லி ராமன் என்று பெயர் வைத்திருந்தோம். இது தான் உலகின் முதல் எந்திர யானையாகும். இதையடுத்து தான் தற்போது கஜா என்ற இந்த எந்திர யானையை முதல் முறையாக தமிழகத்தில் உள்ள கோவிலுக்கு வழங்கி இருக்கிறோம்.

கேரளாவில் தான் இந்த யானை தயாரிக்கப்பட்டது. உயிருள்ள யானைக்கு பதிலாக இந்த எந்திர யானையை பயன்படுத்துவதால் யானைகள் துன்புறுத்தப்படுவது தவிர்க்கப்படும். இப்போது தமிழகத்தில் உள்ள 29 கோவில்களில் யானைகள் உள்ளன. எந்திர யானைகள் பயன்படுத்தப்படும் போது யானைகள் துன்புறுத்தல் தவிர்க்கப்படும், திருச்செந்தூரில் பாகன்களை யானை கொன்றது போன்ற நிகழ்வுகளும் தடுக்கப்படும் என்று கூறினர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+