ராஜதந்திரமான முடிவை எடுத்திருக்கிறார் ரஜினி … சொல்கிறார் கே.டி. ராஜேந்திரபாலாஜி
விருதுநகர்: அதிமுக அரசு டெண்டரால் எடுக்கப்பட்ட ஆட்சி அல்ல; தொண்டர்களால் எடுக்கப்பட்ட ஆட்சி என்று பால்வளத் துறை அமைச்சர் கே.டி ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
தென்காசி மக்களவை தொகுதிக்கான தேசிய ஜனநாயக முற்போக்குக் கூட்டணி வேட்பாளர் அறிமுக நிகழ்ச்சி மற்றும் வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் கே. டி. ராஜேந்திர பாலாஜி, அதிமுக தலைமையிலான கூட்டணி நல்ல முகூர்த்தம் பார்த்து சேர்ந்த அருமையான தம்பதியைக் கொண்டது என்றும், திமுக கூட்டணி விவாகரத்து பெற்ற கூட்டணி என்றும் விமர்சித்தார்.
ரஜினி இதுவரை அரசியலுக்கு வராமல் இருப்பது ராஜதந்திரமான முடிவு என்று கூறிய அவர், மோடியை கண்டு தீவிரவாதிகள் அஞ்சி நடுங்குவதாகவும், அவர் வாழும் இரும்பு மனிதர் என்றும் தெரிவித்தார்.
இந்தத் தேர்தலோடு அமமுக காணாமல் போய்விடும் என்றும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஆருடம் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications