“வாங்க வாங்க.. வாக்காளர்களுக்கு வடை சட்டி வழங்கும் அமைச்சருக்கு வந்தனம்” - பாஜக போஸ்டரால் பரபரப்பு!
விருதுநகர் : அருப்புக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று அமைச்சர் ஆன கேகேஎஸ்எஸ்ஆர்.ராமச்சந்திரன், வாக்காளர்களைச் சந்தித்து நன்றி கூறி வருகிறார்.
Recommended Video
அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர்.ராமச்சந்திரன் சார்பில் வாக்காளர்களுக்கு பரிசுப் பொருளாக வடை சட்டிகள் (வாணலிகள்) வழங்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், வாக்குறுதிகளை நிறைவேற்றாத வருவாய்த்துறை அமைச்சர்
வாக்காளர்களுக்கு வடைசட்டி வழங்கி வந்தனம் செய்கிறார் என பாஜக சார்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
களைகட்டும் ஜனாதிபதி தேர்தல்: கட்சிகளுடன் பேசுவதற்கு இரு டாப் லீடர்களைக் கொண்ட குழு அமைத்தது பாஜக!
அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர்.ராமச்சந்திரன்
கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர்.ராமச்சந்திரன், அருப்புக்கோட்டை தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் வாக்காளர்களைச் சந்தித்து நன்றி தெரிவித்து பரிசுப்பொருள் வழங்கி வருகிறார்.
அருப்புக்கோட்டை
அந்தவகையில் இன்று பாளையம்பட்டி சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள கிராமங்களுக்குச் சென்று வாக்காளர்களைச் சந்தித்த அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர்.ராமச்சந்திரன், திமுக வெற்றி பெற்று ஆட்சிக்கு வர வாக்களித்த மக்களுக்கு நன்றி கூறினார். அமைச்சரின் சார்பில் வாக்காளர்களுக்கு பரிசுப் பொருளாக வாணலிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
பாஜக போஸ்டர்
இந்நிலையில் பாளையம்பட்டி விரிவாக்கப்பகுதி முழுவதும் அமைச்சரின் வருகை தொடர்பாக போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. அந்த போஸ்டர்களில், "வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற வக்கில்லாத வருவாய்த்துறை அமைச்சர் 'வடை சட்டி' வழங்கி வாக்காளர்களுக்கு வந்தனம் செய்கிறார். அன்னாரின் வருகையை பாரதிய ஜனதா கட்சி வாழ்த்தி வரவேற்கிறது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பரபரப்பு
இந்த போஸ்டர்கள், விருதுநகர் கிழக்கு மாவட்டம் அருப்புக்கோட்டை சட்டமன்ற தொகுதி பாரதிய ஜனதா கட்சியினரால் அனைத்து வீதிகளிலும் ஒட்டப்பட்டுள்ளன. வருவாய்த்துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் வாக்காளர்களுக்கு நன்றி கூற வரும் இடங்களில் இதுபோன்ற சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.