விருதுநகர்: பட்டாசு ஆலை வெடி விபத்தில் 4 பேர் படுகாயம் - அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை
விருதுநகர் அருகே சதானந்தபுரத்தில் பத்திரகாளி பட்டாசு ஆலையில் நிகழ்ந்த வெடி விபத்தில் 4 பேர் காயமடைந்தனர்.
விருதுநகர்: சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் நிகழ்ந்த வெடி விபத்தில் 4 பேர் படுகாயமடைந்துள்ளனர். காயமடைந்த நான்கு பேரும் சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவம் குறித்து வசக்காரப்பட்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
சிவகாசி அருகே சதானந்தபுரத்தில் என்பவருக்கு ராஜா என்பவருக்கு சொந்தமான பத்திரகாளி பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. 80 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வரும் நிலையில் ரசாயன கலவை செய்யும் பணியின் போது திடீரென உராய்வு ஏற்பட்டு வெடி விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் ஆனையூர் பகுதியைச் சேர்ந்த பாண்டி என்பவரது மனைவி ஆதிலட்சுமி 25 , ராமர் என்பவரது மனைவி சாந்தி 35, ராமச்சந்திரன் என்பவரது மனைவி முத்துமாரி,37 ஆகிய 3 பேரும் மற்றும் ஐயம்பட்டியைச் சேர்ந்த தளபதி என்பவரது மகன் சுந்தரபாண்டி 46 என்பவரும் படுகாயமடைந்தனர். காயமடைந்த நான்கு பேரும் தீக்காயங்களுடன் சிவகாசி அரசு மருத்துவமனையில் உள்ள தீக்காய சிகிச்சை பிரிவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தீ விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த சிவகாசி மற்றும் விருதுநகர் தீயணைப்பு நிலைய தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்து மீட்புபணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் ஒரு அறை தரைமட்டமானது.

சம்பவம் குறித்து வசக்காரப்பட்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர் மற்றும் வருவாய்த்துறையினர் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இந்த விபத்தில் ஆனையூர் பகுதியைச் சேர்ந்த பாண்டி என்பவரது மனைவி ஆதிலட்சுமி,25 என்பவர் மட்டும் 100 சதவிகிதம் தீக்காயம் ஏற்பட்டு உயிருக்கு போராடி வருகிறார். கடந்த 2 மாதங்களில் விருதுநகர் மாவட்டத்தில் ஏற்படும் 8வது பட்டாசு ஆலை வெடி விபத்து என்பதும் இதுவரை 38 பேர் உயிரிழந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications