சாயங்காலம் 5 மணிக்கு மேல .. ஒரு ஆம்பளை போய் நிர்மலா தேவியை அடிச்சிருக்கான்.. வக்கீல் பரபர தகவல்
நிர்மலாதேவியின் வழக்கறிஞர் பகீர் குற்றச்சாட்டு ஒன்றை தெரிவித்துள்ளார்
Recommended Video
ஸ்ரீவில்லிப்புத்தூர்: "சாயங்காலம் 5 மணிக்கு மேல ஜெயிலை லாக் பண்ணுனதுக்கு அப்பறமா போயி, ஒரு ஆம்பள நிர்மலாதேவியை அடிச்சிருக்கான்" என்று வக்கீல் பசும்பொன் பாண்டியன் பகீர் புகார் தெரிவித்துள்ளார்.
கல்லூரி மாணவிகளை தவறான வழிக்கு அழைத்து செல்ல முயன்றது சம்பந்தமாக நிர்மலாதேவி கைது செய்யப்பட்டார். கூட்டு சதி செய்தது உட்பட சில பிரிவுகளில் நிர்மலாதேவி மற்றும் உரதவி பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவ்ர் கருப்பசாமியும் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கில் சிறை சென்ற நிர்மலாதேவி உட்பட 3 பேருமே இப்போது ஜாமீனில் வெளியே வந்தனர். ஆனால், இது சம்பந்தமான விசரணை ஸ்ரீவில்லிப்புத்தூர் கோர்ட்டில் இன்னமும் நடந்து வருகிறது. ஆனால், கோர்ட் வழக்குகளில் நிர்மலாதேவி சரியாக ஆஜராகாமல் இருந்தார்.

விசாரணை
அவர் மனநல சிகிச்சை எடுத்து வருவதாக அவரது வக்கீல் பசும்பொன் பாண்டியன் தெரிவித்து வந்தார். ஆனால், இந்த காரணத்தை ஏற்றுக் கொள்ளாத கோர்ட், நிர்மலாதேவியின் ஜாமீனை ரத்து செய்து, திரும்பவும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளது. இந்த வழக்கின் விசாரணையையும் இன்றைய தேதிக்கு ஒத்திவைத்தது.

கொலை மிரட்டல்
முன்னதாக, "கோர்ட்டில் ஆஜரானால் ஆசிட்டை வீசுவோம் என கொலை மிரட்டல் விடுக்கிறார்கள்" என்று நிர்மலாதேவி, வக்கீல் பசுபதிபாண்டியனிடம் பேசிய ஆடியோ ஒன்று வெளியான நிலையில், இது சம்பந்தமான தகவல்களை வக்கீல் பசும்பொன் பாண்டியன் ஒரு நாளிதழுக்கு பிரத்யேகமாக பேட்டி தந்துள்ளார். அதில் அவர் தெரிவித்துள்ளதாவது:

அடிச்சிருக்காங்க
"நிர்மலாதேவியை ஜெயிலில் சந்திக்க, 2 பேரை மனு போட செய்தேன்.. ஆனால் யாரையும் பார்க்க அனுமதிக்கவில்லை. வக்கீலுக்குகூட அனுமதி தரவில்லை என்று எனக்கு தகவல் கிடைத்தது. ஜெயிலுக்குள்ளேயே வைத்து நிர்மலாதேவியை அடிச்சிருக்காங்க... சாயங்காலம் 5 மணிக்கு மேல ஜெயிலை லாக் பண்ணுனதுக்கு அப்பறமா போயி, ஒரு ஆம்பள அடிச்சிருக்கான் ஒரு பொம்பளையை!

மீடியா
செய்தியாளர்களை சந்திக்ககூடாது, உன் வக்கீலை மாத்து..ன்னு எல்லாம் பேசியிருக்காங்க. நான் அப்போ இருந்து சொல்லிட்டு வரேன்.. இதில அரசியல் தலையீடு இருக்கு, அமைச்சர் மிரட்டல் இருக்குதுன்னு.. இதை நான் மீடியாகிட்ட சொல்லிடுவேன்னுதான் இப்போ அவங்களுக்கு கலக்கம் வந்துடுச்சு" என்றார்.
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?












Click it and Unblock the Notifications