சாயங்காலம் 5 மணிக்கு மேல .. ஒரு ஆம்பளை போய் நிர்மலா தேவியை அடிச்சிருக்கான்.. வக்கீல் பரபர தகவல்
நிர்மலாதேவியின் வழக்கறிஞர் பகீர் குற்றச்சாட்டு ஒன்றை தெரிவித்துள்ளார்
Recommended Video
ஸ்ரீவில்லிப்புத்தூர்: "சாயங்காலம் 5 மணிக்கு மேல ஜெயிலை லாக் பண்ணுனதுக்கு அப்பறமா போயி, ஒரு ஆம்பள நிர்மலாதேவியை அடிச்சிருக்கான்" என்று வக்கீல் பசும்பொன் பாண்டியன் பகீர் புகார் தெரிவித்துள்ளார்.
கல்லூரி மாணவிகளை தவறான வழிக்கு அழைத்து செல்ல முயன்றது சம்பந்தமாக நிர்மலாதேவி கைது செய்யப்பட்டார். கூட்டு சதி செய்தது உட்பட சில பிரிவுகளில் நிர்மலாதேவி மற்றும் உரதவி பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவ்ர் கருப்பசாமியும் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கில் சிறை சென்ற நிர்மலாதேவி உட்பட 3 பேருமே இப்போது ஜாமீனில் வெளியே வந்தனர். ஆனால், இது சம்பந்தமான விசரணை ஸ்ரீவில்லிப்புத்தூர் கோர்ட்டில் இன்னமும் நடந்து வருகிறது. ஆனால், கோர்ட் வழக்குகளில் நிர்மலாதேவி சரியாக ஆஜராகாமல் இருந்தார்.

விசாரணை
அவர் மனநல சிகிச்சை எடுத்து வருவதாக அவரது வக்கீல் பசும்பொன் பாண்டியன் தெரிவித்து வந்தார். ஆனால், இந்த காரணத்தை ஏற்றுக் கொள்ளாத கோர்ட், நிர்மலாதேவியின் ஜாமீனை ரத்து செய்து, திரும்பவும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளது. இந்த வழக்கின் விசாரணையையும் இன்றைய தேதிக்கு ஒத்திவைத்தது.

கொலை மிரட்டல்
முன்னதாக, "கோர்ட்டில் ஆஜரானால் ஆசிட்டை வீசுவோம் என கொலை மிரட்டல் விடுக்கிறார்கள்" என்று நிர்மலாதேவி, வக்கீல் பசுபதிபாண்டியனிடம் பேசிய ஆடியோ ஒன்று வெளியான நிலையில், இது சம்பந்தமான தகவல்களை வக்கீல் பசும்பொன் பாண்டியன் ஒரு நாளிதழுக்கு பிரத்யேகமாக பேட்டி தந்துள்ளார். அதில் அவர் தெரிவித்துள்ளதாவது:

அடிச்சிருக்காங்க
"நிர்மலாதேவியை ஜெயிலில் சந்திக்க, 2 பேரை மனு போட செய்தேன்.. ஆனால் யாரையும் பார்க்க அனுமதிக்கவில்லை. வக்கீலுக்குகூட அனுமதி தரவில்லை என்று எனக்கு தகவல் கிடைத்தது. ஜெயிலுக்குள்ளேயே வைத்து நிர்மலாதேவியை அடிச்சிருக்காங்க... சாயங்காலம் 5 மணிக்கு மேல ஜெயிலை லாக் பண்ணுனதுக்கு அப்பறமா போயி, ஒரு ஆம்பள அடிச்சிருக்கான் ஒரு பொம்பளையை!

மீடியா
செய்தியாளர்களை சந்திக்ககூடாது, உன் வக்கீலை மாத்து..ன்னு எல்லாம் பேசியிருக்காங்க. நான் அப்போ இருந்து சொல்லிட்டு வரேன்.. இதில அரசியல் தலையீடு இருக்கு, அமைச்சர் மிரட்டல் இருக்குதுன்னு.. இதை நான் மீடியாகிட்ட சொல்லிடுவேன்னுதான் இப்போ அவங்களுக்கு கலக்கம் வந்துடுச்சு" என்றார்.
-
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
EXCLUSIVE: வட இந்தியர்களுக்கு வேலையில்லை.. இனி இட்லி, சப்பாத்தி மட்டும் தான்! குமுறும் ஓட்டல் உரிமையாளர்கள்.! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்?












Click it and Unblock the Notifications