இரவு நேர ரோந்து பணி.. விருதுநகர் மாவட்ட போலீசாரின் மாஸ்டர் பிளான்.. பொதுமக்கள் பாராட்டு
விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் இரவு நேர குற்றச்சம்பவங்களை தடுக்கும் வகையில் தினமும் போலீஸ் அதிகாரிகள் தனியே நியமனம் செய்யப்பட்டு பணி செய்து வருவதை மக்கள் பாராட்டி உள்ளனர்.
தமிழ்நாடு முழுவதும் இரவு நேர குற்றச்சம்பவங்களை தடுக்கும் வகையில் அனைத்து மாவட்ட நிர்வாகங்களும் இரவு நேரத்தில் தனித்தனியே போலீஸ் அதிகாரிகள், போலீசாரை நியமனம் செய்து வருகிறது.
மேலும் ஒவ்வொரு நாளும் நியமனம் செய்யப்படும் போலீஸ் அதிகாரிகள், போலீசாரின் பெயர், அவர்களின் செல்போன் எண் விபரங்கள் அந்தந்த மாவட்ட போலீசாரின் சமூக வலைதள பக்கங்களில் வெளியிடப்பட்டு வருகிறது.
இந்த பட்டியலில் இடம்பெறும் போலீசார் தங்களின் போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இரவு முழுவதும் வாகனங்களில் ரோந்து சென்று கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர். இது பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் உள்ளது.
அந்த வகையில் விருதுநகர் மாவட்ட காவல்துறை சார்பில் நேற்று இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரையிலான இரவு நேர காவல் பணியில் மொத்தம் 8 பேர் நியமனம் செய்யப்பட்டனர். டிஎஸ்பி முகேஷ் (செல்போன் 94981 05360) தலைமையில் விருதுநகர் உட்கோட்டத்துக்கு விருதுநகர் மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் மாரியப்பன் (94421 83184) ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்.
விருதுநகர் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் இன்றைய 23.07.2023 இரவு ரோந்து அலுவல் விபரங்கள்.#virudhunagar #SouthZoneTNpol #TNPolice #TruthAloneTriumphs pic.twitter.com/nEfIaSU8P5
— virudhunagar district police (@Vnr_Police) July 23, 2023
அதேபோல் சிவகாசி உட்கோட்டத்துக்கு சிவகாசி குற்றப்பிரிவு நகர போலீஸ்காரர் டேவிட் ரவிராஜன் (944 30 40588), அருப்புக்கோட்டை உட்கோட்டத்துக்கு அருப்புக்கோட்டை தாலுகா காவல நிலைய ஆய்வாளர் பார்த்திபன் (94981 84881), ராஜபாளையம் உட்கோட்டத்துக்கு ராஜபாளையம் நகர போக்குவரத்து காவல் ஆய்வாளர் லாவண்யா (94981 85887) ஆகியோர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் ஸ்ரீவில்லிப்புத்தூர் உட்கோட்ட பகுதியில் வத்றாப் காவல் நிலைய ஆய்வாளர் ஆறுமுகம் (94430 94656), சாத்தூர் உட்கோட்டத்துக்கு வெம்பக்கோட்டை காவல் நிலைய ஆய்வாளர் நம்பிராஜன் (94981 96111), திருச்சுழி உட்கோட்ட பகுதியில் நரிக்குடி காவல் நிலைய ஆய்வாளர் இளங்கோவன் (86672 60020) ஆகியோர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

பொதுமக்களுக்கு ஏதேனும் பிரச்சனை என்றால் இந்த அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு தினமும் விருதுநகர் மாவட்ட போலீஸ் சார்பில் அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வரும் நிலையில் பொதுமக்கள் பாராட்டுகள் தெரிவித்துள்ளனர்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications