அதிமுக பிரச்சனைகளை பாஜக பேசுவதில் என்ன தப்பு- அசால்டாக கேட்கும் ராஜேந்திர பாலாஜி
விருதுநகர்: அதிமுக பிரச்சனைகள் குறித்து பாஜக ஏன் பேசுகிறது? அதிமுக விஷயத்தில் பாஜக தலையீடு ஏன் என்று தொடர்ந்து கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது. இதற்கு பதிலளித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, "கூட்டணி அமைந்துள்ளதால் அதிமுக பிரச்சனையை பாஜக பேசத்தான் செய்யும்" என்று கூறியிருக்கிறார்.
இது குறித்து மேலும் அவர் பேசியதாவது, "கூட்டணி அமைந்துள்ளதால் பாஜக பிரச்சனையை அதிமுக பேசத்தான் செய்யும். அதேபோல அதிமுகவின் பிரச்சனையை பாஜகவும் பேசும்.

பாஜக என்ன தீண்டத்தகாத கட்சியா? இரு கட்சிகளும் கூட்டணி அமைந்ததில் இருந்து திமுக அச்சத்தில் உள்ளது. நாட்டின் நலனுக்காக, மாநிலத்தின் நலனுக்காக பாஜகவுடன் நாங்கள் கூட்டணி அமைத்திருக்கிறோம். காலமும், சூழலும் மாறும்போது கூட்டணி அமைக்க வேண்டிய நிலை ஏற்படும்" என்று கூறியிருந்தார்.
இதனை தொடர்ந்து பத்திரிகையாளர்கள், 'நடிகர் விஜய் அதிமுகவுக்கு வருவார் என்று சொல்லியிருந்தீர்கள். ஆனால் அவர் திமுக, பாஜகவுடன் கூட்டணியில்லை என்று சொல்லிவிட்டாரே' என்று கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த ராஜேந்திர பாலாஜி,
"அதனால் என்ன? களத்தில் இன்று இரண்டு கட்சிகள்தான் இருக்கிறது. ஒன்று அதிமுக இன்னொன்று திமுக. மற்ற கட்சிகளெல்லாம் எங்கு போனது என்றே தெரியவில்லை. சில கட்சிகள் மூன்றாம் அணியை கூட அமைக்க முயன்று பார்த்தனர். எதுவும் வேலைக்கு ஆகவில்லை. மூன்றாம் கட்சிகள் முதலில் பேசப்படுவார்கள். பின்னர் பேசும் பொருளாக மாறிவிடுவார்கள்.
ஆக களத்தில் நிற்பது இரண்டு கட்சிகள்தான். இதில் ஜெயிக்கப்போவது அதிமுகதான். மற்ற கட்சிகள் எல்லாம் விட்டில் பூச்சிகளை போன்று வரும். ஆனால் களத்தில் நிற்க முடியாது" என்று கூறியுள்ளார்.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்கள்தான் இருக்கின்றன. திமுக தரப்பில் காங்., இடதுசாரிகள், விசிக, மதிமுக, மநீம உள்ளிட்ட கட்சிகளும், அதிமுக தரப்பில் பாஜக உள்ளிட்ட கட்சிகளும் களத்தில் இறங்கியுள்ளன. ஆனால் அதிமுக கூட்டணியில் முக்கிய முடிவுகளை பாஜகதான் எடுக்கிறது என்று அக்கட்சியின் அடிமட்ட தொண்டர்கள் அதிருப்தி தெரிவித்து வருகிறார்கள்.
பெரியார் தொடங்கி அண்ணா வரை பாஜகவினர் கடுமையாக விமர்சித்துள்ளனர். இப்படி இருக்கையில் எதற்காக அவர்களுடன் கூட்டணி என்று கேள்வி எழுப்பியுள்ளனர். மறுபுறம், கட்சியின் முக்கிய முடிவுகள், கட்சியின் பிரச்சனை பற்றிய விவாதங்களை பாஜக கையில் எடுக்கிறது. இதனை எடப்பாடி பழனிசாமியே பல நேரங்களில் உறுதி செய்திருக்கிறார்.
அதாவது, கடந்த 6ம் தேதி செய்தியாளர்கள் சந்திப்பில் எடப்பாடியிடம், முதல்வர் வேட்பாளர் யார் என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், "முதலமைச்சர் வேட்பாளர் விவகாரத்தில் இறுதி முடிவு வந்து டெல்லி எடுக்கிற முடிவுதான். அது உங்களுக்கே தெரியும். உங்கள் எல்லோருக்குமே தெரியும்" என்று கூறியிருந்தார். இப்படி முக்கிய முடிவுகள் எதற்காக பாஜக எடுக்க வேண்டும் என்று கேள்வி எழுந்திருந்த நிலையில், அதற்கு ராஜேந்திர பாலாஜி தற்போது பதிலளித்திருக்கிறார்.
-
தேர்தலில் போட்டியில்லை.. டெல்லிக்கு கடிதம் எழுதிய அண்ணாமலை.. பாஜகவில் டிவிஸ்ட் -
சிங்கம் களம் இறங்கிருச்சு.. சிங்காநல்லூரில் களம் காணும் அண்ணாமலை? அக்கா தமிழிசை எங்கே தெரியுமா? -
30 சிறுமிகளிடம் சில்மிஷம்.. தொக்காக சிக்கிய பாஜக கவுன்சிலர் மகன்! கோவாவில் ஷாக் -
கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் தொண்டர் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி.. பரபரப்பு -
ஷாக்கில் சரவணன்! எடப்பாடிக்காக விழுந்து விழுந்து வேலை பார்ப்பாரே அவரா? பாஜக விஐபிகள் மெகா ஸ்கெட்ச் -
"அந்த" 54 தொகுதிகள் தான் மேஜிக்.. மம்தாவை காலி செய்ய சக்கர வியூகம்.. இறங்கி அடிக்கும் பாஜக! -
அதிவேகத்தில் அதிமுக.. ஏரியா பிரித்த எடப்பாடி! அதிமுக கூட்டணியில் யார்? எங்கே போட்டி? உத்தேச லிஸ்ட்! -
பலே ஆளுங்க எடப்பாடி பழனிசாமி.. பாஜகவின் 27 தொகுதிகளில் இப்படி ஒரு ட்விஸ்டா! பாவம் ஜிகே வாசன்? -
குமரியில் காலியாகும் அதிமுகவின் அடித்தளம்.. 4 தொகுதிகளை கைப்பற்றிய பாஜக.. சோர்வடைந்த தொண்டர்கள்! -
நாகர்கோவில் தொகுதியை.. தூக்கி கொடுத்த எடப்பாடி பழனிசாமி! போராட்டத்தில் குதித்த அதிமுக மகளிர் அணி -
எல்லாமே வேஸ்ட்.. பல லட்சம் போச்சே.. புலம்பி தள்ளிய கெளதமி.. போனை கூட எடுக்காத எடப்பாடி! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்!












Click it and Unblock the Notifications