அதிமுக பிரச்சனைகளை பாஜக பேசுவதில் என்ன தப்பு- அசால்டாக கேட்கும் ராஜேந்திர பாலாஜி
விருதுநகர்: அதிமுக பிரச்சனைகள் குறித்து பாஜக ஏன் பேசுகிறது? அதிமுக விஷயத்தில் பாஜக தலையீடு ஏன் என்று தொடர்ந்து கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது. இதற்கு பதிலளித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, "கூட்டணி அமைந்துள்ளதால் அதிமுக பிரச்சனையை பாஜக பேசத்தான் செய்யும்" என்று கூறியிருக்கிறார்.
இது குறித்து மேலும் அவர் பேசியதாவது, "கூட்டணி அமைந்துள்ளதால் பாஜக பிரச்சனையை அதிமுக பேசத்தான் செய்யும். அதேபோல அதிமுகவின் பிரச்சனையை பாஜகவும் பேசும்.

பாஜக என்ன தீண்டத்தகாத கட்சியா? இரு கட்சிகளும் கூட்டணி அமைந்ததில் இருந்து திமுக அச்சத்தில் உள்ளது. நாட்டின் நலனுக்காக, மாநிலத்தின் நலனுக்காக பாஜகவுடன் நாங்கள் கூட்டணி அமைத்திருக்கிறோம். காலமும், சூழலும் மாறும்போது கூட்டணி அமைக்க வேண்டிய நிலை ஏற்படும்" என்று கூறியிருந்தார்.
இதனை தொடர்ந்து பத்திரிகையாளர்கள், 'நடிகர் விஜய் அதிமுகவுக்கு வருவார் என்று சொல்லியிருந்தீர்கள். ஆனால் அவர் திமுக, பாஜகவுடன் கூட்டணியில்லை என்று சொல்லிவிட்டாரே' என்று கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த ராஜேந்திர பாலாஜி,
"அதனால் என்ன? களத்தில் இன்று இரண்டு கட்சிகள்தான் இருக்கிறது. ஒன்று அதிமுக இன்னொன்று திமுக. மற்ற கட்சிகளெல்லாம் எங்கு போனது என்றே தெரியவில்லை. சில கட்சிகள் மூன்றாம் அணியை கூட அமைக்க முயன்று பார்த்தனர். எதுவும் வேலைக்கு ஆகவில்லை. மூன்றாம் கட்சிகள் முதலில் பேசப்படுவார்கள். பின்னர் பேசும் பொருளாக மாறிவிடுவார்கள்.
ஆக களத்தில் நிற்பது இரண்டு கட்சிகள்தான். இதில் ஜெயிக்கப்போவது அதிமுகதான். மற்ற கட்சிகள் எல்லாம் விட்டில் பூச்சிகளை போன்று வரும். ஆனால் களத்தில் நிற்க முடியாது" என்று கூறியுள்ளார்.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்கள்தான் இருக்கின்றன. திமுக தரப்பில் காங்., இடதுசாரிகள், விசிக, மதிமுக, மநீம உள்ளிட்ட கட்சிகளும், அதிமுக தரப்பில் பாஜக உள்ளிட்ட கட்சிகளும் களத்தில் இறங்கியுள்ளன. ஆனால் அதிமுக கூட்டணியில் முக்கிய முடிவுகளை பாஜகதான் எடுக்கிறது என்று அக்கட்சியின் அடிமட்ட தொண்டர்கள் அதிருப்தி தெரிவித்து வருகிறார்கள்.
பெரியார் தொடங்கி அண்ணா வரை பாஜகவினர் கடுமையாக விமர்சித்துள்ளனர். இப்படி இருக்கையில் எதற்காக அவர்களுடன் கூட்டணி என்று கேள்வி எழுப்பியுள்ளனர். மறுபுறம், கட்சியின் முக்கிய முடிவுகள், கட்சியின் பிரச்சனை பற்றிய விவாதங்களை பாஜக கையில் எடுக்கிறது. இதனை எடப்பாடி பழனிசாமியே பல நேரங்களில் உறுதி செய்திருக்கிறார்.
அதாவது, கடந்த 6ம் தேதி செய்தியாளர்கள் சந்திப்பில் எடப்பாடியிடம், முதல்வர் வேட்பாளர் யார் என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், "முதலமைச்சர் வேட்பாளர் விவகாரத்தில் இறுதி முடிவு வந்து டெல்லி எடுக்கிற முடிவுதான். அது உங்களுக்கே தெரியும். உங்கள் எல்லோருக்குமே தெரியும்" என்று கூறியிருந்தார். இப்படி முக்கிய முடிவுகள் எதற்காக பாஜக எடுக்க வேண்டும் என்று கேள்வி எழுந்திருந்த நிலையில், அதற்கு ராஜேந்திர பாலாஜி தற்போது பதிலளித்திருக்கிறார்.
-
பாஜக - தவெக கூட்டணி உருவாகிறதா? திமுகவை வீழ்த்த பம்பர் ஆஃபர் 60 சீட், மெகா பொறுப்பு? டெல்லி பலே மூவ் -
ஆந்திர மாடல்.. விஜயை வைத்து பாஜக போட்ட பலே ப்ளான்! எண்ட் கார்டு போட்ட பனையூர்! அவ்வளவு தானா? -
நிதிஷ் குமாரின் நிலை எடப்பாடிக்கும் வருமா.. ஸ்டாலின் கவலைப்பட தேவையில்லை.. நயினார் நாகேந்திரன் பதில் -
ONOE: "ஒரே நாடு ஒரே தேர்தல்.. நோயை விடக் கொடிய மருந்து" - முதல்வர் ஸ்டாலின் கடும் எதிர்ப்பு! -
மாஸ் வைத்து ஜெயிக்க முடியாதுங்க.. அண்ணாமலையை சீண்டிய குஷ்பு.. பாஜகவில் வெடித்த மோதல் -
காங்கிரஸை விட கூடுதல் தொகுதிகள் வேண்டும்.. அதிமுகவிடம் மல்லுக்கட்டும் பாஜக.. எவ்வளவு சீட் தெரியுமா? -
திமுகவுக்கு எதிராக மதுரையில் பிரம்மாண்ட அஸ்திரம்.. அதிமுக எடுத்த பெரிய முடிவு -
ஜெயலலிதா இருந்தா இப்படி நடக்குமா? மொத்தமாக கண்ட்ரோலை எடுத்த பாஜக..லிஸ்டோடு டெல்லிக்கு ஓடிய எடப்பாடி! -
அதிமுகவிடம் 57 தொகுதிகளை கேட்கும் பாஜக? 57 பொறுப்பாளர்கள் வராங்களாம்.. பிஎல் சந்தோஷ் சொன்ன தகவல்! -
அசிங்க அசிங்கமா பேசுறாங்க..என் கட்சியில எனக்கே பாதுகாப்பு இல்லை! பரபரப்பை பற்ற வைத்த பாஜக கவுன்சிலர் -
தீயாய் வேலை செய்யும் திமுக..ஆமை வேகத்தில் அதிமுக! இப்படியே போனால் அவ்வளவு தான்? எடப்பாடிக்கு பிரஷர்! -
"அண்ணன் எடப்பாடியாரே.. எச்சரிக்கையா இருங்க”.. நிதிஷ்குமாருக்கு ஏற்பட்ட நிலை.. திருமாவளவன் வார்னிங்!












Click it and Unblock the Notifications