முக்குலத்தோர் VS நாயக்கர்.. நயினார் நாகேந்திரனின் சாத்தூர் தொகுதியில் எந்த ஜாதி வாக்காளர்கள் அதிகம்?
திருநெல்வேலி: விருதுநகர் மாவட்டம் சாத்தூர் சட்டசபை தொகுதியில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் போட்டியிடுகிறார். முக்குலத்தோர் சமுதாயத்தினரின் ஓட்டுகளை குறிவைத்து அவர் களமிறங்கி உள்ள நிலையில் அந்த தொகுதியில் எந்தெந்த ஜாதியை சேர்ந்த வாக்காளர்களின் ஓட்டுகள் எவ்வளவு உள்ளது? என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.
தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக உள்ளது. பாஜக மாநில தலைவராக நயினார் நாகேந்திரன் இந்த முறை தொகுதி மாறி போட்டியிடுகிறார். அவர் திருநெல்வேலி சட்டசபை தொகுதியின் எம்எல்ஏவாக உள்ள நிலையில் இந்த முறை விருதுநகர் மாவட்டம் சாத்தூர் தொகுதியில் களமிறங்கி உள்ளார்.

இந்த தொகுதியில் திமுக சார்பில் கடற்கரை ராஜ் களமிறங்கி உள்ளார். நாம் தமிழர் சார்பில் ஆனந்த ராஜ் என்பவரும், தவெகவில் அஜித் என்பவரும் போட்டியிட்டுள்ளார். இதுதவிர நயினார் நாகேந்திரனை அரசியலில் வளர்த்துவிட்ட சசிகலா தற்போது அவருக்கு எதிராக திரும்பி உள்ளார். சசிகலாவின் அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் பிஎம்டியின் இசக்கி ராஜா களமிறங்கி உள்ளார்.
எந்தெந்த ஜாதியினர் எவ்வளவு?
சாத்தூர் சட்டசபை தொகுதியில் மொத்தம் 2 லட்சத்து 27 ஆயிரத்து 963 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண்கள் 1,10,693 பேர். பெண்கள் 1,17,207 பேர். மூன்றாம் பாலினத்தவர்கள் 63 பேர் உள்ளனர். இந்த வாக்காளர்களில் முக்குலத்தோர் 27 சதவீதமாகவும், நாயக்கர் சமுதாயத்தை சேர்ந்தவர் 23 சதவீதமாகவும், பட்டியலினத்தை சேர்ந்தவர்கள் 18 - 20 சதவீதமாகவும், யாதவர்கள் சுமார் 10% - 12 சதவீதமாகவும் உள்ளனர். இதுதவிர நாடார் உள்பட பிற சமுதாயத்தை சேர்ந்தவர்கள் கணிசமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
முக்குலத்தோரை குறிவைத்து...
நயினார் நாகேந்திரன் தொகுதி மாறி போட்டியிட முக்கிய காரணம் அவர் சார்ந்த முக்குலத்தோர் சமூகம் தான். சாத்தூர் சட்டசபை தொகுதியில் உள்ள வாக்காளர்களில் 27 சதவீதம் பேர் முக்குலத்தோர் சமுதாயத்தை சேர்ந்தவர். இதனால் அவர்களின் ஓட்டுகளை பெற்று வெல்லும் முனைப்பில் நயினார் நாகேந்திரன் சாத்தூரை தேர்வு செய்துள்ளார்.
திமுக வேட்பாளர் எந்த ஜாதி?
அதேவேளையில் 23 சதவீத வாக்காளர்கள் நாயக்கர் சமுதாயத்தை சேர்ந்தவர்களாக உள்ளனர். இதனால் தான் திமுக நாயக்கர் சமுதாயத்தை சேர்ந்த கடற்கரை ராஜ் என்பவரை வேட்பாளராக அறிவித்துள்ளது. நயினார் நாகேந்திரன் தொகுதிக்கு புதியவர். ஆனால் கடற்கரை ராஜ் ஏற்கனவே தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தவர். அதோடு மக்களுக்கு நன்கு பரீட்சயமானவர். இதனால் இந்த தொகுதியில் நிச்சயம் போட்டி கடுமையக இருக்கும் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.
-
ஆதவ் அர்ஜுனா மூலம் ‘ஜனநாயகன்’ படத்தை லீக் பண்ணிட்டு நாடகம்.. சிபிஐ விசாரணை கேட்க ரெடியா? பாயும் பாஜக -
முதல்வர் பதவியை பிடுங்கிய பிறகும் இப்படியா! நிதிஷுக்கு அதிர்ச்சி கொடுத்த பாஜக.. ஜனாதிபதி மூலம் செக் -
வானதி சீனிவாசனுக்கு திடீர் உடல்நலக்குறைவு.. மருத்துவமனைக்கு ஓடிவந்த அண்ணாமலை..கோவை வடக்கில் ட்விஸ்ட் -
அண்ணாமலையின் டெல்லி விசிட்.. ஹெலிகாப்டர் ஏற்பாடு செய்து கொடுத்த பாஜக தலைமை.. பின்னணி என்ன? -
அதிருப்திக்கு நடுவே.. திடீரென தமிழகம் மீது போகஸை திருப்பிய மோடி! நாளை முக்கிய மீட்டிங்.. பின்னணி -
வானதி சீனிவாசன் ஐசியூவில் அனுமதி.. 3-4 நாட்கள் தொடர் சிகிச்சை தேவையாம்.. என்ன பிரச்சனை? -
முதலில் தமிழன், அப்புறம் தான் இந்து! மேலூர் பாஜகவை அதிரவிட்ட வார்த்தை.. பின்னணியில் விகே பாண்டியன்? -
“விஜய்க்கு தகுதியும் இல்லை. தலைமைப் பண்பும் இல்லை”.. காட்டமாக விளாசிய சரத்குமார். -
மம்தாவை தூக்கி எறியும் பாஜக? ஸ்கெட்ச் போட்டு இறங்கிய அமித் ஷா.. மேற்கு வங்கத்தில் பரபர அரசியல் களம் -
துரந்தர் 2.. தமிழ்நாட்டில் தடை செய்ய கோரி வழக்கு தள்ளுபடி ஏன்.. ஐகோர்ட் தீர்ப்பு என்ன -
கந்தசாமியா.. பழனிசாமியா.. கன்ஃபியூஷ் ஆன அண்ணாமலை.. ஷாக்கான அதிமுக வேட்பாளர் -
பெண்களுக்கு மாதம் ₹3000.. வேலையில்லாத ஆண்களுக்கும் உதவி தொகை.. மம்தாவை வீழ்த்த அமித் ஷா மெகா பிளான்












Click it and Unblock the Notifications