சிவகாசி சுதாவிற்கு கிடைத்த 55 லட்சம். விருதுநகர் தொழில் அதிபருக்கு நம்பவே முடியாத நம்பிக்கை துரோகம்
விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் சிவகாசி பேராபட்டியில் தொழில் அதிபர் கண்ணன் என்பவர் அச்சகம், கிரானைட், டைல்ஸ் நிறுவனம், குவாரி நடத்தி வருகிறார். இவருக்கு சாலைப்பணிக்கு டெண்டர் வாங்கி தருவதாக சுதா என்பவர் ரூ.55 லட்சம் மோசடி செய்ததாக புகார் எழுந்தது. போலி வட்டார வளர்ச்சி பெண் அதிகாரியாக அறிமுகம் ஆகி பணத்தை ஏமாற்றியதாக தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். அவரது தந்தை கைதாகி உள்ளார்.
போலியான அரசு அதிகாரிகள் என்று அறிமுகம் ஆகி, சிலர் தொழில் அதிபர்களை ஏமாற்றி பணம் பறிக்கிறார்கள். சிலர் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு நெருக்கமானவர்கள் என்று கூறி ஏமாற்றி மோசடி செய்கிறார்கள். இப்படிப்பட்டவர்களை ஆரம்பத்திலேயே அடையாளம் கணடு, காவல்துறையில் புகார் அளித்தால் தப்பிக்க முடியும். இல்லாவிட்டால் பணத்தை இழந்து இறுதியாக காவல்துறையில் போய் புகார் அளிக்க வேண்டிய நிலை வந்துவிடும். அப்படி ஒரு சம்பவம் சிவகாசியில் நடந்துள்ளது.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி பேராபட்டியைச் சேர்ந்த 51 வயதாகும் கண்ணன் தொழில் அதிபர் ஆவார். இவர் சிவகாசியில் அச்சகம், கிரானைட், டைல்ஸ் நிறுவனம், குவாரி நடத்தி வருகிறார். ஒரு அறக்கட்டளை மூலம் முதியோர் காப்பகம் நடத்த முயற்சி செய்து வந்தார்.
இவரது நிறுவனத்தில் வேலைபார்த்த சங்கரநாராயணன் என்பவர் என்ஜினியராக வேலை செய்தார். இந்நிலையில் சிவகாசி கிரகத்தாயம்மாள் நகரை சேர்ந்த வெங்கட்ராமானுஜம் என்பவருடைய மகள் சுதாவை (37) அவர் அறிமுகப்படுத்தினார். இவர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையில் ஒருங்கிணைப்பாளராக பணியாற்றுவதாகவும், விரைவில் சிவகாசி யூனியனுக்கு வட்டார வளர்ச்சி அலுவலராக பதவி உயர்வு பெற இருப்பதாகவும் கூறி நம்ப வைத்திருக்கிறார்.
இந்நிலையில் சுதா, நான் வீடு கட்ட உள்ளேன், அதற்கு கிரானைட் கற்கள் தேவைப்படுவதாக கண்ணனிடம் கூறி இருக்கிறார். அப்போது உங்கள் குவாரியில் இருந்து கிரானைட் கற்கள் தந்தால், பேராபட்டியில் சாலை அமைப்பதற்கு டெண்டர் பெற்றுத்தருகிறேன் என சுதா கூறியிருந்தாராம்.
டெண்டர் அனுமதிக்கும், முதியோர் காப்பகம் கட்டவும் கலெக்டரிடம் பேசி அனுமதி வாங்கி தர வேண்டும் என்றால் கேட்கும்போது பணம் தர வேண்டும் என்றும் கூறினராம். இதையடுத்து கண்ணன், பல முறையாக வங்கி மூலம் ரூ.55 லட்சத்து 42 ஆயிரத்தை அனுப்பினாராம். ஆனால் அனுமதி பெற்று கொடுக்கவில்லை. விசாரித்ததில் சுதா போலி வட்டார வளர்ச்சி அதிகாரி என்பது தொழில் அதிபர் கண்ணனுக்கு தெரியவந்தது.
இதையடுத்து தொழில் அதிபர் கண்ணன் அளித்த புகாரின்பேரில், சுதா, அவருடைய தந்தை வெங்கட்ராமானுஜம் (72), என்ஜினியர் சங்கரநாராயணன், உதவியாளர் பீமா பேகம் உள்பட 8 பேர் மீது விருதுநகர் பொருளாதார குற்றத்தடுப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதில் சுதா, வெங்கட்ராமானுஜம் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர்












Click it and Unblock the Notifications