மனநலன் பாதிக்கப்பட்ட மாணவர்களை வைத்து கழிவறையை சுத்தம் செய்ய வைத்த கொடூரம்! பள்ளி ஆசிரியர் கைது
விருதுநகர்: விருதுநகரில் அரசு உதவி பெறும் பள்ளியில் மனநலம் பாதிக்கப்பட்ட மாணவர்களை கொண்டு கழிவறை சுத்தம் செய்ய வைக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே சாட்சியாபுரத்தில் மனநலன் பாதிக்கப்பட்டவர்களுக்கான அரசு உதவிபெறும் சி.எஸ்.ஐ பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் சுமார் 80க்கும் அதிகமான மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்நிலையில், இந்த பள்ளி மாணவர்கள் சிலர் துடைப்பம் கொண்டு பள்ளியின் கழிவறையை சுத்தம் செய்யும் வீடியோ சோஷியல் மீடியாக்களில் வெளியாகி சலசலப்பை ஏற்படுத்தியது. மட்டுமல்லாது செய்தி ஊடகங்களிலும் இந்த வீடியோ வெளியாகி விவாதங்களை கிளப்பியது.

இதனையடுத்து மாற்றுத்திறனாளிகள் நல அதிகாரிகள் பள்ளியில் ஆய்வை மேற்கொண்டனர். இது குறித்து பள்ளி நிர்வாகத்திடம் விசாரித்தபோது பள்ளிக்கும் தலைமை ஆசிரியருக்கும் அவப்பெயர் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக இமானுவேல் எனும் இடைநிலை ஆசிரியர் மாணவர்களை வைத்து கழிவறை சுத்தம் செய்ய வைத்து அதை வீடியோவாக பதிவு செய்துள்ளது தெரிய வந்திருக்கிறது. இதனையடுத்து காவல்துறையில் ஆசிரியர் இமானுவேல் மீது பள்ளி நிர்வாகம் புகார் அளித்துள்ளது.
புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட போலீசார் ஆசிரியர் இமானுவேலை கைது செய்துள்ளனர். பள்ளிக்கும், தலைமை ஆசிரியருக்கும் அவப்பெயர் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக மனநலன் பாதிக்கப்பட்ட மாணவர்களை கொண்டு கழிவறையை சுத்தம் செய்ய வைத்து அதை வீடியோவாக எடுத்து ஆசிரியர் ஒருவரே சோஷியல் மீடியாவில் பரப்பியுள்ள சம்பவம் பெரும் விருதுநகர் மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன?












Click it and Unblock the Notifications