Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வீட்டு முன் விளையாடிய 2 சிறுமிகள்.. எமனாக மாறிய இரும்பு கேட்.. விருதுநகரில் துடிதுடித்த பிஞ்சுகள்

Subscribe to Oneindia Tamil

விருதுநகர்: விருதுநகர் சிவகாசி அருகே வீட்டின் வாசலில் இருந்த இரும்பு கேட் சரிந்து விழுந்து 2 சிறுமிகள் உயிரிழந்துள்ளனர். வீட்டின் முன்பு இருந்த இரும்பு கேட்டில் ஏறி விளையாடிக்கொண்டிருந்த போது சரிந்து விழுந்துள்ளது. இதில் சம்பவ இடத்திலேயே கமலிகா, ரிஷிகா ஆகிய இரு சிறுமிகளும் உயிரிழந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே கொங்கலாபுரத்தில் வசித்து வருபவர் ராஜாமனி. இவரது 9 வயது மகள் கலலிகா. பள்ளியில் அரையாண்டு விடுமுறை விடப்பட்டதால் அவரது உறவுக்கார சிறுமி 4 வயது ரிஷிகாவும் இவரது வீட்டுக்கு வந்திருந்தார்.

two-girls-killed-after-iron-gate-collapses-in-sivakasi-near-virudhunagar

விடுமுறை என்பதால் வீட்டில் சிறுமிகள் இருவரும் விளையாடிக்கொண்டிருந்தனர். அப்போது வீட்டின் வாசலில் இருந்த இரும்பு கேட் முன்பு சிறுமிகள் இருவரும் விளையாடியுள்ளனர். அப்போது திடீரென இரும்பு கேட், தடுப்புச் சுவரோடு இடிந்து விழுந்தது.

இதில் சிக்கிக்கொண்ட இரு சிறுமிகளும் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சத்தம் கேட்டு ஓடி வந்த குடும்பத்தினர் இருவரையும் மீட்டு அருகில் உள்ள மருத்துமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிறுமிகள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்து விட்டனர்.

சிறுமிகள் உயிரிழந்ததாக சொன்னதும் மருத்துவமனையில் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கதறி அழுத சம்பவம் அப்பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+