கொரோனா: அதிரவைக்கும் அமெரிக்கா.. உலக நாடுகளை மிஞ்சியது.. ஒரே நாளில் 1,480 பேர் பலி
வாஷிங்டன்: அமெரிக்காவில் ஒரே நாளில் கொரோனாவால் பலியானோரின் எண்ணிக்கை 1,480 பேராக உயர்ந்துள்ளது. மற்ற எந்த நாடுகளிலும் இது போல் ஒரே நாளில் இத்தனை பலி எண்ணிக்கை இருக்கவில்லை.
Recommended Video
அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,76,995 ஆக உயர்ந்துள்ளது. அதிலும் அமெரிக்காவின் நியூயார்க், நியூஜெர்சி உள்ளிட்ட மாகாணங்களில் கொரோனாவின் தாக்கம் அதிகமாக உள்ளது.
வல்லரசு நாடான இங்கு இதுவரை 7,406 பேர் பலியாகிவிட்டனர். இதை கட்டுப்படுத்த அமெரிக்க அரசு கடுமையாக போராடி வருகிறது. ஆனால் பலி எண்ணிக்கையை கட்டுக்குள் கொண்டு வரமுடியவில்லை.

சீனாவில் வைரஸ்
வைரஸ் முதன்முதலில் பரவிய சீனாவை காட்டிலும் அமெரிக்காவில் பலி எண்ணிக்கை அதிகமாக உள்ளதாக ஒரு கருத்து நிலவுகிறது. இதுகுறித்து செய்தியாளர்கள் கேட்டபோது கொரோனா பலி எண்ணிக்கையில் சீன அரசு உண்மையைதான் சொல்கிறது என்பது நமக்கு எப்படி தெரியும் என கேட்டார்.

அரசு திணறல்
இந்த நிலையில் கடந்த வியாழக்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை அமெரிக்காவில் 1,480 பேர் பலியாகிவிட்டனர். அதாவது கிட்டதட்ட1500 பேர் வரை. இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எந்த உலக நாடுகளிலும் இது போன்று அதிக அளவிலான பலி எண்ணிக்கை இல்லை. இதனால் கொரோனாவை கட்டுப்படுத்த முடியாமல் அமெரிக்க அரசு திணறி வருகிறது.

டிரம்ப் கவலை
அமெரிக்காவில் பலி எண்ணிக்கை இனி வரும் வாரங்களில் மிகவும் அதிகமாக இருக்கும் என டிரம்ப் கவலை தெரிவித்திருந்தார். அது போல் பலி எண்ணிக்கை ஒரு லட்சத்திலிருந்து 2 லட்சமாக உயர வாய்ப்பு இருப்பதாக அந்த நாட்டு மருத்துவர் அதிர வைக்கும் தகவலை தெரிவித்திருந்தார். அது போல் மருத்துவ உபகரணங்களுக்கும் இங்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எப்போதும் மற்ற நாடுகளுக்கு உதவு பழக்கத்தை கொண்ட அமெரிக்கா, தற்போது ரஷ்யாவின் உதவியை நாடியது.

மாஸ்க்
பொது இடங்களுக்கு வருவோர் துணியிலால் ஆன மாஸ்க்குகளை கட்டாயம் அணிய வேண்டும் என மத்திய நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு நடவடிக்கை ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. என்னதான் நோய் அறிகுறிகள் இல்லாவிட்டாலும் இன்னும் வைரஸ் அவர்களது உடலிலேயே இருக்கும் என்பதால் இந்த பரிந்துரையை செய்துள்ளது. அமெரிக்காவில் இறந்தோரின் 25 சதவீதம் மக்கள் நியூயார்க்கை சேர்ந்தவர்கள்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications